திருவள்ளுவரின் திருக்குறள்

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.



உட்பிரிவுகள் சிறப்பாக அமைந்து இடையுறுக்கு அஞ்சாத வெற்றிக் கொள்ளும் படை அடைந்தால் அதுவே அரசனின் ஆதாரங்களுக்கு முதன்மையானது.



எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.



தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, காவல்துறை என நாட்டைக் காப்போர் பிரிவினால் நிறைந்து, போர்க்களத்தில் புண்பட அஞ்சாது, பகைவரை வெல்லும் படையே ஆட்சியாளரின் செல்வத்துள் எல்லாம் முதன்மையான செல்வம் ஆகும்.



எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச்சிறந்த செல்வமாகும்.


A conquering host, complete in all its limbs, that fears no wound,
Mid treasures of the king is chiefest found.


The army which is complete in (its) parts and conquers without fear of wounds is the chief wealth of the king.



uRuppamaindhu ooRanjaa velpadai vaendhan
veRukkaiyuL ellaam thalai

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.



போர்களத்தில் இடையுறுக்கு அஞ்சாத நெஞ்சுறுதியை கைவிடாது காப்பது பழம்பெரும் படையை தவிர மற்றவைக்கு அரிதானது.



போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது.



தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்‌, தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்.



போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.


In adverse hour, to face undaunted might of conquering foe,
Is bravery that only veteran host can show.


Ancient army can alone have the valour which makes it stand by its king at the time of defeat, fearless of wounds and unmindful of its reduced strength.



ulaividaththu ooRanjaa van-kaN tholaivitaththuth
tholpataik kallaal aridhu

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.



நாகத்தின் சப்தம் கேட்டே எல்லாவற்றையும் விட்டோடும் எலிக்கூட்டம் போல் நற்படையால் பகை அழியும்.



எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.



பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.



எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்.


Though, like the sea, the angry mice send forth their battle cry;
What then? The dragon breathes upon them, and they die!.


What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra.



oliththakkaal ennaam uvari elippakai
naakam uyirppak kedum

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.



அழிவற்றதாகவும், அச்சமுடன் விலகாமலும், வந்த வேலையை கடிணமுடன் சாதிப்பதுவே படை.



(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.



போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.



எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.


That is a host, by no defeats, by no desertions shamed,
For old hereditary courage famed.


That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy).



azhivindri aRaipoagaa thaaki vazhivandha
van-ka Nadhuvae padai

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.



இன்றே மரணம் என்றே ஆனலும் கூட்டமாய் எதிர்க்கும் ஆற்றல் உடையதுவே படை.



எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.



எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.



உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்.


That is a 'host' that joins its ranks, and mightily withstands,
Though death with sudden wrath should fall upon its bands.


That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury.



kootrutandru maelvarinum koodi edhir-niRkum
aatra ladhuvae padai

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.



வீரம், மானம், இறுதி வரை தேவையானவைகள், தெளிவான முடிவு என நான்கும் அவசியமானது படைக்கு.



வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.



வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும்.



வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்.


Valour with honour, sure advance in glory's path, with confidence;
To warlike host these four are sure defence.


Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an army



maRamaanam maaNda vazhichchelavu thaetram
enanhaankae Emam padaikku

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.



வாழைத்தார் அடுக்கியது போல் படைக்களத்தில் போரை வழிநடத்த அறிந்திருக்க வேண்டும்.



தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.



தன்மீது வந்த பகைவரின் போரைத் தடுக்கும் முறையை அறிந்து அவர்களில் முதலாவதாக வந்து சண்டையிடும் காலாட்படை ( தூசிப்படை, தேர்ப்படை, கொடிப்படை, முன்னணிச் சேனை என்றும் பெயர்) தன்மீது வராமல் தடுப்பதே படை.



களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும்.


A valiant army bears the onslaught, onward goes,
Well taught with marshalled ranks to meet their coming foes.


That is an army which knowing the art of warding off an impending struggle, can bear against the dust-van (of a hostile force).



thaardhaangich chelvadhu thaanai thalaivandha
poardhaangum thanmai aRindhu

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.



வெற்றிபெரும் தன்மையும், அதற்கான ஆற்றலும் இல்லை என்றாலும், அதன் அமைப்பு முறையால் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.



போர் செய்யும் வீரமும்( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்.



பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.



போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும் விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும்.


Though not in war offensive or defensive skilled;
An army gains applause when well equipped and drilled.


Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearance.



adaldhakaiyum aatralum illeninum thaanai
padaiththakaiyaal paadu peRum

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.



குழப்பமும், வேண்டப்படாத வெறுப்பும், தேவையை சந்திக்கமுடியா வறுமையும், இல்லாத படையே வெல்லும்.



தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.



எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்.



சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்.


Where weakness, clinging fear and poverty
Are not, the host will gain the victory.


An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty.



siRumaiyum sellaath thuniyum vaRumaiyum
illaayin vellum padai

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.



நிலையான மன உறுதி உடைய மனிதர்கள் நிறைய இருப்பினும் வழிநடத்தும் தலைமக்கள் சரியாக அமையாவிட்டால் வெற்றி இல்லை.



நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.



சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.



உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது.


Though men abound, all ready for the war,
No army is where no fit leaders are.


Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals.



nilaimakkaL saala udaiththeninum thaanai
thalaimakkaL ilvazhi il


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உட்பிரிவுகளுடன் அஞ்சாத படை ஆள்பவரின் முதன்மையானது. நாகத்தின் ஒசை கேட்டு ஓடும் எலிக் கூட்டமாய் நடுக்க செய்யும் அஞ்சாத படை பழைமையானது. வாழைத்தார் போல் அடுக்கப்பட்ட படை எண்ணிக்கை குறைந்தாலும் வெற்றி பெறும். மன உறுதி உள்ள வீரர்கள் இருந்தும் வழிநடத்த சரியான ஆள் இல்லை என்றால் வெற்றி இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.