திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: சான்றாண்மை / Perfectness

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.



கட்டாயம் செய்யவேண்டிய கடன் என்பது நல்லவைகள். அத்தகைய கடனை அறிந்து செயல்படுவதே சான்றாண்மை.



கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.



நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.



ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்.


All goodly things are duties to the men, they say
Who set themselves to walk in virtue's perfect way.


It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good.



katanenpa nallavai ellaam katanaRindhu
saandraaNmai maeRkoL pavarkku

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.



குணம் நலமாக இருப்பதே சான்றோரக்கு நலன். மற்றைய நலன்கள் எப்படி இருப்பினும் குணநலம் போன்றது இல்லை.



சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.



சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.



நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும் அழகல்ல.


The good of inward excellence they claim,
The perfect men; all other good is only good in name.


The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights.



kuNanhalam saandroar nalanae piRanhalam
enhnhalaththu uLLadhooum andru

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.



அன்புசெய்தல், தீங்கு செய்ய நாணுதல், மற்றவர்களோடு இணக்கமாய் இருத்தல், யாவற்றையும் ஆய்ந்து அறிதல், வாய்மையாக இருத்தல் என்ற ஐந்தும் சான்றாண்மை என்ற பாத்திரத்தை தாங்கும் தூண்களாகும்.



அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.



மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.



அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.


Love, modesty, beneficence, benignant grace,
With truth, are pillars five of perfect virtue's resting-place.


Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests.



anpunhaaN oppuravu kaNNoattam vaaimaiyodu
aindhusaal oondriya thooN

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.



அழிக்காமல் நலமுடன் வாழவைப்பதே நோன்பு. அடுத்தவரின் தீயச் செயல்களை சொல்லாமல் நல்லனவற்றை எடுத்துக் கொள்வதே சால்பு.



தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.



பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.



உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.


The type of 'penitence' is virtuous good that nothing slays;
To speak no ill of other men is perfect virtue's praise.


Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults.



kollaa nalaththadhu noanmai piRardheemai
sollaa nalaththadhu saalpu

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.



செயல்படுபவர்களின் செயல்திறன் பணிவுடன் இருப்பது. அதுவே சான்றோருக்கு மாற்றாரை மாற்றும் ஆயுதமாக இருக்கிறது.



ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.



ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே.



ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்.


Submission is the might of men of mighty acts; the sage
With that same weapon stills his foeman's rage.


Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes.



aatruvaar aatral paNidhal adhusaandroar
maatraarai maatrum padai

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.



சான்றாண்மைக்கு வரையறை யாதெனில் தோல்வியை ஏற்க தகுதியற்றவர் இடத்திலும் ஏற்றுக் கொளல்.



சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.



சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும்.



சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்.


What is perfection's test? The equal mind.
To bear repulse from even meaner men resigned.


The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors.



saalpiRkuk kattaLai yaadhenin thoalvi
thulaiyallaar kaNNum koLal

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.



துன்பம் தந்தவருக்கும் இனிமையானதை செய்யவில்லை என்றால் சான்றாண்மையால் என்ன பயன்?



துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.



தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?.



தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?.


Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?.


He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).



innaasey thaarkkum iniyavae seyyaakkaal
enna payaththadhoa saalpu

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.



இன்னல்கள் ஒருவருக்கு இழுவானது இல்லை பெருந்தன்மை என்ற சால்பு திடமாக உண்டானால்.



சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.



சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.



சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல.


To soul with perfect virtue's strength endued,
Brings no disgrace the lack of every earthly good.


Poverty is no disgrace to one who abounds in good qualities.



inmai oruvaRku iLivandru saalpennum
thiNmai-uN daakap peRin

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.



கால மாற்றம் எனப்படும் ஊழியால் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தன்னை நிலைத்த தன்மையில் தக்க வைத்திருப்பவர் சான்றாண்மைக்கே பெருங்கடல் எனப்படுவார்.



சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.



சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.



தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.


Call them of perfect virtue's sea the shore,
Who, though the fates should fail, fail not for evermore.


Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.



oozhi peyarinum thaampeyaraar saandraaNmaikku
aazhi enappadu vaar

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.



சான்றாக வாழ்பவர் சான்றாண்மை குறைந்தால் அகம் புறம் என்ற இருவேறுபட்ட நிலைகளும் பொறுத்து ஏற்குமா?



சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.



சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்.



சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.


The mighty earth its burthen to sustain must cease,
If perfect virtue of the perfect men decrease.


If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden.



saandravar saandraaNmai kundrin irunhilandhaan
thaangaadhu mannoa poRai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அவசியம் செய்ய வேண்டியதை கட்டாயம் செய்வதே சான்றாண்மை. குண நலமுடன் அன்பு நாணம் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை என ஐந்துடன் இருப்பதும், நல்லனவற்றை அழிக்காமல் அதை வளர்ப்பதும், தகுதி அற்றவர் இடத்திலும் தோல்வியை ஏற்பதும், துன்பம் தந்தவற்கும் இனியவை செய்வதும், சான்றாண்மையாகும். இப்படியானவர் ஊழி கடந்து போற்றப்படுவர். இவர்கள் சான்றாண்மை குறைந்தால் அகம் புறம் என இரு நிலையும் ஏற்காது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.