திருவள்ளுவரின் திருக்குறள்

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.



விட்டிற்கு தேவையானதை சிறப்புற செய்பவளை தனதாக கொண்டவன் வளம் பல காணும் வாழ்கை துணை அடைந்தவன்.



இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.



பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.



இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.


As doth the house beseem, she shows her wifely dignity;
As doth her husband's wealth befit, she spends: help - meet is she


She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state



manaikdhakka maaNpudaiyaL aakiththaR KoNdaan
vaLaththakkaaL vaazhkkaith thuNai

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.



வீட்டை சிறப்பாக ஆளும் தகுதி இல்லாதவள் இல்லத்தரசியனால் (மனைவி ) வாழ்வில் எவ்வளவு சிறப்புகள் இருந்தும் பயன் இல்லை .



இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.



நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.



நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.


If household excellence be wanting in the wife,
Howe'er with splendour lived, all worthless is the life


If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing



manaimaatchi illaaLkaN illaayin vaazhkkai
enaimaatchith thaayinum il

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?



இல்லை என்பதே இல்லத்தாளின் குணமாக இருந்தால், உள்ளது எது இல்லத்தாளை விட துன்பம் தரும் ஒன்று.



மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?.



நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?.



நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.


There is no lack within the house, where wife in worth excels,
There is no luck within the house, where wife dishonoured dwells


If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?



illadhen illavaL maaNpaanaal uLLadhen
illavaL maaNaak Kadai?

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.



பெண்ணை விட பெறவேண்டிய ஒன்று எதுவும் இல்லை ,கற்பென்னும் திடத்தன்மை உண்டாக்க பெற்றால் .



இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.



கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?.



கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?.


If woman might of chastity retain,
What choicer treasure doth the world contain


What is more excellent than a wife, if she possess the stability of chastity ?



peNNin perundhakka yaavula kaRpennum
thiNmaiuN daagap peRin

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.



சிறப்பு பெற்றவர்களை தொழ மறுத்து தனது கணவனை மட்டுமே தொழுபவள் எதிர்பாக்கும் பொழுது பெய்யும் மழை போன்றவள்.



வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.



பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.



கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.


No God adoring, low she bends before her lord;
Then rising, serves: the rain falls instant at her word


If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain



theyvam thozhaaaL kozhunhan thozhudhezhuvaaL
peyyenap peyyum mazhai

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.



தன்னை காத்து தான் கொண்டவர்களை பாதுகாத்து தகுதிக்கு உதாரனமாய் வாய்ச்சொல் காத்து சோர்வில்லாமல் இருபவளே பெண்.



கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.



உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.



கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.


Who guards herself, for husband's comfort cares, her household's fame,
In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name


She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame



thaRkaaththuth thaRkoNtaaR paeNith thakaisaandra
soRkaaththuch soarvilaaL peN

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.



காவலில் வைத்து காப்பது என்ன செய்யும் பெண்களின் தன்னை தான் காக்கும் தன்மையே முதன்மையானது.



மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.



இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.



தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.


Of what avail is watch and ward?
Honour's woman's safest guard


What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity



siRaikaakkum kaappevan seyyum makaLir
niRaikaakkum kaappae thalai

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.



அடைந்தவர் அடைந்தது அடையவேண்டிய பெண்ணை அறியசிறப்பும் புதிய ஒளியும் இருக்கும் உலகில்.



கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.



பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.



நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.


If wife be wholly true to him who gained her as his bride,
Great glory gains she in the world where gods bliss abide


If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish



petraaR peRinpeRuvar peNdir perunjiRappup
puththaeLir vaazhum ulagu

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.



புகழ் அடைந்த குடும்ப வழக்கை வழாதவருக்கு இல்லை இகழ்ந்து பேசுவார் முன் காளை போன்ற கம்பிர நடை



புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.



புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.



புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.


Who have not spouses that in virtue's praise delight,
They lion-like can never walk in scorner's sight


The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them



pukazhpurindha illiloarkku illai ikazhvaarmun
ERupoal peedu nadai

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.



முழுமை என்பது குடும்ப வாழ்க்கை அதன் சிறப்பே நல்ல குழந்தைகளை பெறுவது.



மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.



ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.



குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.


The house's 'blessing', men pronounce the house-wife excellent;
The gain of blessed children is its goodly ornament


The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness



mangalam enpa manaimaatchi matru adhan
nankalam nanmakkat peru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வாழ்தல் என்பது உள்ளது சிறத்தல் ஆகும். அதற்கு துணையாக இருக்கும் எதிர்பாலினம் சிறப்பாக அமைந்துவிட்டால் வளம்பல கிடைத்துவிடும். ஆனால் நிர்வாகத் திறன் இல்லாதவர் என்றால் ஏற்றம் இருக்காது. வேண்டிய பொழுது வரும் மழைப் போன்றவள் மனைவி மேலும், தன்னைக் காத்து தன்னை சார்ந்தவரையும் காப்பவள் எனவே, பெற வேண்டியது நல்ல துணையே. அதுவே மங்களம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.