திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: மானம் / Honour

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.



அத்தியாவசியமான சிறப்புகள் உடையது என்றாலும் அதை அற்பமான செயல் செய்து அடையக் கூடாது.



இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.



ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.



கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.


Though linked to splendours man no otherwise may gain,
Reject each act that may thine honour's clearness stain.


Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death.



indri amaiyaach chiRappina aayinum
kundra varupa vidal

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.



சிறப்பு அடையலாம் என்றாலும் சிறப்பற்றதை செய்யமாட்டார் சிறப்புடன் திடமான மனிதனாய் வாழ வேண்டுபவர்.



புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.



புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.



புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈ.டுபடமாட்டார்.


Who seek with glory to combine honour's untarnished fame,
Do no inglorious deeds, though men accord them glory's name.


Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.



seerinum seeralla seyyaarae seerodu
paeraaNmai vaendu pavar

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.



பெருமைக்குறிய இடம் அடைந்தால் பணிவுடன் இருக்க வேண்டும். சிறுமையான சுருக்கத்தில் தன் உயர்வை காக்க வேண்டும்.



செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.



நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.



உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்.


Bow down thy soul, with increase blest, in happy hour;
Lift up thy heart, when stript of all by fortune's power.


In great prosperity humility is becoming; dignity, in great adversity.



perukkaththu vaendum paNidhal siRiya
surukkaththu vaendum uyarvu

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.



தலையில் இருந்து திடமற்று உதிர்ந்தாலும் மக்காத மயிர் போன்றவர் மனித கூட்டத்தில் இருந்து தன் நிலை இழிவான இறுதியை அடைந்தவர்.



மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.



நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.



மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்.


Like hairs from off the head that fall to earth,
When fall'n from high estate are men of noble birth.


They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.



thalaiyin izhindha mayiranaiyar maandhar
nilaiyin izhindhak kadai

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.



மலை போன்றவர் என்றாலும் குறைந்து தாழ்ச்சி அடைவார் குற்றமானதை குறைந்தளவு செய்தால்.



மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.



நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.



குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈ.டுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.


If meanness, slight as 'abrus' grain, by men be wrought,
Though like a hill their high estate, they sink to nought.


Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.



kundrin anaiyaarum kundruvar kundruva
kundri anaiya seyin

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.



புகழ் இல்லாமல் புதுமை நாடி உயர்வு பெறாமல் என்ன பயன்? இகழ்வானவர்களின் பின் சென்றால் வரும் இழிநிலை.



மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.



உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?.



இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?.


It yields no praise, nor to the land of Gods throws wide the gate:
Why follow men who scorn, and at their bidding wait?.


Of what good is it (for the high-born) to go and stand in vain before those who revile him ? it only brings him loss of honour and exclusion from heaven.



pukazh-indraal puththaeNnhaattu uyyaadhaal enmatru
ikazhvaarpin sendru nilai

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.



ஒத்திசைவு இல்லாமல் புரியாத ஒருவர் பின் சென்று வாழும் அந்த நிலையைவிட கொட்டவன் எனப்படுதல் நன்று.



மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.



இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.



தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்.


Better 'twere said, 'He's perished!' than to gain
The means to live, following in foeman's train.


It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him.



ottaarpin sendroruvan vaazhdhalin anhnhilaiyae
kettaan enappatudhal nandru

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.



மருந்தால் சாதிக்க முடியாது ஊனில் உயிர் நிலைக்கும் வாழ்க்கை. எனவே பெருந்தகமை என்பது பீடை வந்த இடத்திலும் உயிரை மாய்க்காது இருத்தலே.



ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.



குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ?.



சாகாமலே இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்.


When high estate has lost its pride of honour meet,
Is life, that nurses this poor flesh, as nectar sweet?.


For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death.



marundhoamatru oon-Ompum vaazhkkai perundhakaimai
peetazhiya vandha idaththu

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.



மயிர் நீங்கினால் கவரிமான் வாழாது என்றால் அதுபோலவே உயிர் நீப்பர் மானம் வரின்.



தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.



மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.



உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்.


Like the wild ox that, of its tuft bereft, will pine away,
Are those who, of their honour shorn, will quit the light of day.


Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.



mayirnheeppin vaazhaak kavarimaa annaar
uyirnheeppar maanam varin

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.



அசிங்கம் ஏற்பட்டதால் வாழ்வதை தவிர்த்த மானம் உள்ளவர்களை வழிகாட்டும் ஒளியாக மதித்து வணங்கும் உலகம்.



தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.



தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.



மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.


Who, when dishonour comes, refuse to live, their honoured memory
Will live in worship and applause of all the world for aye!.


The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity.



iLivarin vaazhaadha maanam udaiyaar
oLidhozhudhu Eththum ulagu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அதிகபட்ச தேவை தீர்க்கும் என்றாலும் அதை குறுக்கு வழியில் அடைய நினைப்பதே மானம் என்பாதல் சிறப்பற்ற ஒன்றை செய்யமாட்டர் சிறப்புடன் வாழ நினைப்பவர். தகுதி வளர்ந்தவர் உயர்ந்த நிலையில் பணிவாகவும் தாழ்ச்சி ஏற்படும் பொழுது தன்னை உயர்வாகவும் தற்காத்துக் கொள்வார். உதிர்ந்த மயிர் சிதையாது என உணர்ந்து மனித கூட்டத்திற்கு அற்பாற்பட்டு சிந்தித்து நிலையாக நிறுத்த முடியாத உயிருக்கு மதிப்பளித்து மனித குலத்திற்கே வழிகாட்டியாக வாழ்வதே மானம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.