திருவள்ளுவரின் திருக்குறள்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.



ஆசைப்படுதல் என்பது எல்லா உயிருக்கும் எக்காலத்திலும் தவறாமல் பிறப்பைத் தரும் வித்து



எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.



எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.



ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.


The wise declare, through all the days, to every living thing.
That ceaseless round of birth from seed of strong desire doth spring.


(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire.



avaaenpa ellaa uyirkkum enhjnhjaandrum
thavaaap piRappeenum viththu

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.



தேவையான பொழுது தேவை எண்ணமற்ற நிலை மற்றபடி தேவையற்றதும் தேவை என்றால் வரும்.



ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.



பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.



விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்.


If desire you feel, freedom from changing birth require!
'I' will come, if you desire to 'scape, set free from all desire.


If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire.



vaeNdungaal vaeNdum piRavaamai matradhu
vaeNdaamai vaeNta varum

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.



தேவையற்ற நிலைக்கு ஒப்ப சிறந்த செல்வம் இங்கு இல்லை வேறு எங்கும் அதற்க்கு ஒப்பானது இல்லை.



அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.



எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.



தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.


No glorious wealth is here like freedom from desire;
To bliss like this not even there can soul aspire.


There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it.



vaeNdaamai anna vizhuchchelvam eeNtillai
aaNdum aqdhoppadhu il

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.



தூய்மை என்பது ஆசை இல்லாது இருத்தல் மற்றவை வாய்மையை விரும்புவதால் வரும்.



தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.



மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.



தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.


Desire's decease as purity men know;
That, too, from yearning search for truth will grow.


Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.



thoouymai enpadhu avaavinmai matradhu
vaaimai vaeNta varum

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.



பயம் இல்லாதவர் என்பவர் ஆசை இல்லாதவர் மற்றவர்கள் இல்லாமையை இல்லாது செய்யாதவர்கள்.



பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.



ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.



ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.


Men freed from bonds of strong desire are free;
None other share such perfect liberty.


They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free.



atravar enpaar avaaatraar matraiyaar
atraaka atradhu ilar

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.



இறையச்சம் கொள்வதே அறம் ஒருவரை ஏமாற்ற நினைப்பதே ஆசை.



ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.



ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.



ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.


Desire each soul beguiles;
True virtue dreads its wiles.


It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him.



anjuva thoarum aRanae oruvanai
vanjippa thoarum avaa

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.



ஆசையின் செயல்களை ஆழமாக தொலைத்தால் தர்மத்திற்கு மாறாத செயல்கள் தன் தேவைக்கு ஏற்ப வரும்.



ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.



ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.



கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்.


Who thoroughly rids his life of passion-prompted deed,
Deeds of unfailing worth shall do, which, as he plans, succeed.


If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them.



avaavinai aatra aRuppin thavaavinai
thaanvaendu maatraan varum

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.



ஆசை இல்லாதவருக்கு இல்லை என்றாகிவிடும் துன்பம் ஆசை இருப்பின் தவறாது மேன்மேலும் வரும்.



அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.



ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.



ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.


Affliction is not known where no desires abide;
Where these are, endless rises sorrow's tide.


There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.



avaa-illaark killaakunh thunpam aqdhuNdael
thavaaadhu maenmael varum

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.



இன்பம் தடைப் படாது நீளும், ஆசை என்ற துன்பத்திற்கு துன்பம் கொடுத்தால்.



அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.



ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.



பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.


When dies away desire, that woe of woes
Ev'n here the soul unceasing rapture knows.


Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed.



inpam idaiyaRaa theeNdum avaavennum
thunpaththuL thunpanG ketin

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.



ஆராய முடியாத இயற்கை ஆசையை அகற்றினால் அதுபோன்றே நிலைத்த தன்மையை இயற்கை தரும்.



ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.



ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.



இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.


Drive from thy soul desire insatiate;
Straight'way is gained the moveless blissful state.


The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed.



aaraa iyaRkai avaanheeppin anhnhilaiyae
paeraa iyaRkai tharum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பிறப்பை தருவது ஆசை. தேவை என்று வேண்டுதல் செய்ய வேண்டும் என்றால் மீண்டும் பிறவாத நிலை மட்டுமே மற்றவை தானாகவே வரும். ஆசை அற்ற நிலையே தூய்மையானது. இதுவே இன்பத்தின் பிறப்பிடம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.