திருவள்ளுவரின் திருக்குறள்

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.



தன் இல்லச் சிறப்பை மட்டும் கவனிப்பவர் நற்பயன் அடைய முடியாது. செயல்கள் அற்று சும்மா இருக்க நினைப்பவருக்கு வேண்டான பொருள் அது.



கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.



மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.



பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.


Who give their soul to love of wife acquire not nobler gain;
Who give their soul to strenuous deeds such meaner joys disdain.


Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.



manaivizhaivaar maaNpayan eydhaar vinaivizhaiyaar
vaeNtaap poruLum adhu

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.



ஆக்கபூர்வமான செயல்களை கவனிக்காமல் பெண்ணை மட்டுமே விரும்புபவன் வெட்கப்படக்கூடிய பெரிய வேட்கக் கேட்டை அடைவான்.



கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.



தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.



ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.


Who gives himself to love of wife, careless of noble name
His wealth will clothe him with o'erwhelming shame.


The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause great shame (to ali men) and to himself.



paeNaadhu peNvizhaivaan aakkam periyadhoar
naaNaaka naaNuth tharum

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.



இல்லத்தரசியிடம் பணிவு இயல்பாக இல்லை என்றால் எக்காலத்திலும் நல்லவர்கள் முன் நாண வேண்டும்.



மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.



மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.



நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்.


Who to his wife submits, his strange, unmanly mood
Will daily bring him shame among the good.


The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good.



illaaLkaN thaazhndha iyalpinmai eGnGnaandrum
nallaaruL naaNuth tharum

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.



குடும்ப தலைவிக்கு அஞ்சும் அடுத்தது அறியும் அறிவில்லாதவன் செயல்திறன் சிறப்பாக இருக்காது.



மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.



தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.



மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.


No glory crowns e'en manly actions wrought
By him who dreads his wife, nor gives the other world a thought.


The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.



manaiyaaLai anjum maRumaiyi laaLan
vinaiyaaNmai veeReydha lindru

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.



மனைவிக்கு அஞ்சுபவர் எல்லா வகையிலும் அஞ்சி நல்லார்கும் நல்லதைச் செய்ய மாட்டார்.



மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.



தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.



எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.


Who quakes before his wife will ever tremble too,
Good deeds to men of good deserts to do.


He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.



illaaLai anjuvaan anjumaR ReGnGnaandrum
nallaarkku nalla seyal

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.



இமைக்காது இருக்கும் மனதிடம் உள்ளவராக வாழ்ந்தாலும் நற்கதியை அடையமுடியாது நல்லபடியாக அமையாத மனைவிக்கு அஞ்சுபவர்.



மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.



தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.



அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது.


Though, like the demi-gods, in bliss they dwell secure from harm,
Those have no dignity who fear the housewife's slender arm.


They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods.



imaiyaarin vaazhinum paatilarae illaaL
amaiyaardhoaL anju pavar

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.



ஆண் என்ற தாகத்தால் பெண் ஏவிடும் வேலையைச் செய்பவரை காட்டிலும் நாணமுள்ள பெண் பெருமைக்கு உரியவள்.



மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.



மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.



ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்.


The dignity of modest womanhood excels
His manliness, obedient to a woman's law who dwells.


Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife.



peNNaeval seydhozhukum aaNmaiyin naaNutaip
peNNe perumai udaiththu

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.



நண்பர்களுக்கு முழுமையாக இருக்கமாட்டார், நன்மையானதை செய்யமாட்டார் அழகான நெற்றி உடையவளின் பொட்டு போல் ஒட்டிக் கொண்டவர்.



மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.



தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.



ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்.


In Who to the will of her with beauteous brow their lives conform,
Aid not their friends in need, nor acts of charity perform.


Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.



nattaar kuRaimutiyaar nandraatraar nannudhalaaL
pettaangu ozhuku pavar

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.



தர்ம செயலும், நிறைந்த பொருளும், பிற நற்செயலும் பெண்மைக்கு மயங்கி அடிமைச் செயல் செய்பவருக்கு இல்லை.



அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.



அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.



ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.


No virtuous deed, no seemly wealth, no pleasure, rests
With them who live obedient to their wives' behests.


From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure.



aRavinaiyum aandra poruLum piRavinaiyum
peN-Eeval seyvaarkaN il

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.



நல்லெண்ணமும் மன உறுதியும் கொண்டவர்கள் இடத்தில் எக்காலத்திலும் பெண்மைக்கு அடி பணிந்தோம் என்ற அறியாமை இல்லை.



நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.



சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.



சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்.


Where pleasures of the mind, that dwell in realms of thought, abound,
Folly, that springs from overweening woman's love, is never found.


The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom.



eNsaerndha nenjath thitanutaiyaarkku eGnGnaandrum
peNsaerndhaam paedhaimai il


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

மனைவி மக்கள் மட்டுமே என வாழ்ந்தால் மான்பு மிகுந்தவராக முடியாது. மனைவியிடம் பணிவுடன் நடந்து நாணமற்று வாழலாம் மாறாக அவள் ஏவல் செய்யும்படி நடந்தால் நற்பெறு அடையமுடியாது. பெண்ணின் அழகிய நெற்றிக்கு திலகம் போல் ஒட்டிக்கொண்டு இருப்பவர் நண்பர்கள் மத்தியில் சிறப்பு அடையமாட்டார். பெண்ணுக்கு ஏவல் வேலை செய்பவரை பெண்ணே மதிப்பதில்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.