திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நிலையாமை / Instability

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.



நிலையில்லாதவற்றை நிலையது என்று உணர்வது அறிவற்றவர்களின் ஆணவச் செயல்.



நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.



நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.



நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.


Lowest and meanest lore, that bids men trust secure,
In things that pass away, as things that shall endure!.


That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).



nillaadha vatrai nilaiyina endrunarum
pullaRi vaaNmai kadai

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.



கூத்துப் பார்க்கக் கூடும் கூட்டம் போலவே நிறையும் செல்வம் அது களைவது போலவே கலைந்தும் போகும்.



பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.



நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.



சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.


As crowds round dancers fill the hall, is wealth's increase;
Its loss, as throngs dispersing, when the dances cease.


The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly.



kooththaattu avaikkuzhaath thatrae perunjelvam
poakkum adhuviLinh thatru

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.



நிலைக்காத இயல்புடைய செல்வத்தை அடைந்துவிட்டால் அதைக்கொண்டு நிலையானதை செய்யவேண்டும்.



செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.



நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.



நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.


Unenduring is all wealth; if you wealth enjoy,
Enduring works in working wealth straightway employ.


Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.



aRkaa iyalpitruch selvam adhupetraal
aRkupa aangae seyal

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.



ஒரு நாள் என்று காட்டப்படுவது உயிர் என்ற மரத்தை அறுக்கும் வாள் என்று உணர்வுள்ளவர்கள் அறிவார்கள்.



வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.



நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.



வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.


As 'day' it vaunts itself; well understood, 'tis knife',
That daily cuts away a portion from thy life.


Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life.



naaLena ondrupoaR kaatti uyireerum
vaaLadhu uNarvaarp peRin

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.



நாக்கு விக்குளால் அடைபடுவதற்கு முன் (மரணத்திற்கு முன்) நல்ல செயல்களை விரும்பி செய்திடல் வேண்டும்.



நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.



நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.



வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.


Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath,
Arouse thyself, and do good deeds beyond the power of death.


Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent.



naachchetru vikkuLmael vaaraamun nalvinai
maeRsendru seyyap padum

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.



நீண்ட நாட்கள் இருந்த ஒருவர் இன்று இல்லை என்ற பெருமை படைத்தது இந்த உலகம்.



நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.



நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.



இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாக் கொண்டதாகும்.


Existing yesterday, today to nothing hurled!-
Such greatness owns this transitory world.


This world possesses the greatness that one who yesterday was is not today.



nerunhal uLanoruvan indrillai ennum
perumai udaiththuiv vulagu

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.



சிறிது நேரம் கூட வாழ்வதை தெரிந்துக் கொள்ளாதவர் நினைக்கும் கோடியும் தேவையற்ற பலவே.



அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.



உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உ‌டம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.



ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.


Who know not if their happy lives shall last the day,
In fancies infinite beguile the hours away!.


Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment.



orupozhudhum vaazhvadhu aRiyaar karudhupa
koatiyum alla pala

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.



ஓட்டை பிரிந்து தனியே பறந்துவிடும் பறவைப் போலவே உடம்புடன் உயிர் கொண்ட நட்பு.



உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.



உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.



உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.


Birds fly away, and leave the nest deserted bare;
Such is the short-lived friendship soul and body share.


The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.



kutampai thaniththuozhiyap puLparanh thatrae
udampotu uyiridai natpu

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.



தூங்கிவிடுவதுப் போன்றது மரணம் தூங்கிப் பின்பு விழிப்பதுப் போன்றது பிறப்பு.



இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.



உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.



நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.


Death is sinking into slumbers deep;
Birth again is waking out of sleep.


Death is like sleep; birth is like awaking from it.



uRangu vadhupoalunhj saakkaatu uRangi
vizhippadhu poalum piRappu

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.



புகலிடம் அமையாமல் அலைகிறதோ உடம்பில் சிலகாலம் இருக்கும் உயிர்.



(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.



உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!.



உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.


The soul in fragile shed as lodger courts repose:-
Is it because no home's conclusive rest it knows?.


It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.



pukkil amaindhindru kolloa udampinuL
thuchchil irundha uyirkku


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நிலையற்றதை நிலை என்று நினைக்கும் அறிவுள்ள யாரும் கிழானவர்களே. சிறுக சேர்ந்த கூட்டம் உடனே வெளியேறும் கூத்டாட்டு மைதானத்தின் நிகழ்கவே செல்வத்தின் நிலை. உலகின் சிறப்பே நேற்று இருந்தவர் இன்று இல்லை என்பதாகும். எனது என்ற பற்று அறுத்தவனே எல்லாம் உடையவன். மரணமும் நிலையின்றி தூக்கம் போல் நித்தம் நிகழ்கிறது. ஏதார்த்த சூழலை உணர்ந்தவரே பிறப்பை முடித்துக் கொள்கிறார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.