திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: பழைமை / Familiarity

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.



பழைமை எனப்படுவது என்னவென்றால் எதன் பொருட்டும் நாட்கள் மாறுவதைப் போல் மாற்றிக் கொள்ளாமல் தொடரும் நட்பு.



பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.



பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத நட்பு எனலாம்.



பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.


Familiarity is friendship's silent pact,
That puts restraint on no familiar act


Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy).



pazhaimai enappaduvadhu yaadhenin yaadhum
kizhamaiyaik keezhndhitaa natpu

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.



நட்பிற்கு உறுப்பு உரிமையுடன் நடப்பது. மேலும் அதை மிகுதியாக்கவது சான்றோர் கடன்.



நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.



நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்.



பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்.


Familiar freedom friendship's very frame supplies;
To be its savour sweet is duty of the wise.


The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise.



natpiR kuRuppuk kezhudhakaimai matradhaRku
uppaadhal saandroar kadan

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.



நெடுநாட்கள் பழகிய நடபால் எந்த பயனும் இல்லை உரிமையுடன் செயல்படும் வாய்ப்பு இல்லையென்றால்.



பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்.



தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?.



பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத்தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப்போகும்.


When to familiar acts men kind response refuse,
What fruit from ancient friendship's use?.


Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy ?.



pazhakiya natpevan seyyunG kezhudhakaimai
seydhaangu amaiyaak kadai

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.



நன்மதிப்புடன் நட்பு கொண்டு இருப்பவர் உரிமையால் தன்னை கேளாமல் வேண்டியதை செய்தாலும் பழைமை பாராட்டுவார்.



உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.



தம் நண்பர் உரிமை எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியத்தைத் தாம் அறிந்திருந்தாலும் நண்பரால் விரும்பிச் செய்யப்படுவது என்பதனால் அறிவுடையார் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வர்.



பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்.


When friends unbidden do familiar acts with loving heart,
Friends take the kindly deed in friendly part.


If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability.



vizhaidhakaiyaan vaeNdi iruppar kezhudhakaiyaaR
kaeLaadhu nattaar seyin

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.



மடமையில் ஒன்றாகாது நீண்டநாள் உறவு என்று உணர வேண்டும் வருந்தக்கூடியதை நண்பர் செய்தாலும்.



வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.



நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக.



வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.


Not folly merely, but familiar carelessness,
Esteem it, when your friends cause you distress.


If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy.



paedhaimai ondroa perungizhamai endruNarka
noadhakka nattaar seyin

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.



வாழ்வின் தேவைகளை கடந்து எல்லையில் நின்றவரும் துறக்கமாட்டார், தொல்லைகளை அழிக்க துணை நின்றவரின் தொடர்பை



உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.



நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார்.



நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்.


Who stand within the bounds quit not, though loss impends,
Association with the old familiar friends.


Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends.



ellaikkaN nhindraar thuRavaar tholaividaththum
thollaikkaN nindraar thodarpu

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.



அழிவை தரும் செயலை செய்தாலும் அன்பில் இருந்து விலக மாட்டார் அன்பினால் நட்பு பாராட்டுபவர்.



அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.



தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றையே செய்தாலும் நெடுங்காலமாக நட்பை உடையவர் நண்பர்மீது தாம் கொண்ட அன்பை விட்டுவிடமாட்டார்.



தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைச் செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார்.


Waters True friends, well versed in loving ways,
Cease not to love, when friend their love betrays.


Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause (them) their ruin.



azhivandha seyyinum anpaRaar anpin
vazhivandha kaeNmai yavar

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.



நட்புற்கு இழக்கு என்று அடுத்தவர் சொல் கேளாமல் உரிமையுடன் நட்பு பாராட்ட வல்லவருக்கு தீங்கு செய்தால் நாளுக்கே இழுக்கு ஏற்படும்.



பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.



நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம்.



நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்.


In strength of friendship rare of friend's disgrace who will not hear,
The day his friend offends will day of grace to him appear.


To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault.



kaeLizhukkam kaeLaak kezhudhakaimai vallaarkku
naaLizhukkam nattaar seyin

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.



கெடுதல் நினையாது தொடரும் நட்பை கைக்கொண்டவர் நட்பை கைவிடாமல் இருக்கவே நினைக்கும் உலகு.



உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.



உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும்.



தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகம் போற்றும்.


Friendship of old and faithful friends,
Who ne'er forsake, the world commends.


They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy.



ketaaa vazhivandha kaeNmaiyaar kaeNmai
vidaaar vizhaiyum ulagu

விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.



விரும்பத் தகாதவரும் விரும்புவார், பழைமையான நண்பரின் பண்பை அறிந்தும் விலகாத ஒருவரை.



(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.



பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.



பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.


Ill-wishers even wish them well, who guard.
For ancient friends, their wonted kind regard.


Even enemies will love those who have never changed in their affection to their long-standing friends.



vizhaiyaar vizhaiyap padupa pazhaiyaarkaN
paNpin thalaippiriyaa thaar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நாட்களைப் போல் மாறாமல் நிலையாக இருப்பதே பழைமை. உரிமையும் உடன்பாடும் பழைமையால் வரும். துறவியும் பழைமை பாராட்டும் நட்பை துறக்கமாட்டார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.