திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: ஈகை / Giving

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.



வளமற்றவர்களுக்கு உதவுவதே உதவி மற்றவை எல்லாம் குறிப்பறிந்து மீண்டும் பெரும் தன்மை உடையது.



வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.



ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.



இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.


Call that a gift to needy men thou dost dispense,
All else is void of good, seeking for recompense.


To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.



vaRiyaarkkondru eevadhae eekaimaR Rellaam
kuRiyedhirppai neera thudaiththu

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.



நல்ல நதி என்றாலும் முழ்கிவிடுதால் கெடுதலாகும். மேல ஒரு உலகம்(சுவர்க்கம்) இல்லை என்றாலும் கொடுப்பதே நன்மை தரும்.



பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.



நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.



பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.


Though men declare it heavenward path, yet to receive is ill;
Though upper heaven were not, to give is virtue still.


To beg is evil, even though it were said that it is a good path (to heaven). To give is good, even though it were said that those who do so cannot obtain heaven.



nallaaRu eninum koLaldheedhu maelulakam
illeninum eedhalae nandru

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.



இல்லை என்ற துன்பத்தை சொல்லாத தன்மை கொடுக்கும் குணம் படைத்த குடும்பத்தாருக்கே உண்டு.



யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.



ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.



தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.


'I've nought' is ne'er the high-born man's reply;
He gives to those who raise themselves that cry.


(Even in a low state) not to adopt the mean expedient of saying "I have nothing," but to give, is the characteristic of the mad of noble birth.



ilanennum evvam uraiyaamai eedhal
kulanutaiyaan kaNNae yuLa

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.



இல்லை என்று சொல்லாமல் கொடுப்பது கேட்பவர் முகம் மலர்ச்சி அடையும்வரை இருப்பதே அளவு.



பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.



கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.



ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.


The suppliants' cry for aid yields scant delight,
Until you see his face with grateful gladness bright.


To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance.



innaadhu irakkap patudhal irandhavar
inmukanG kaaNum aLavu

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.



வழிகாட்டுபவர் வழிகாட்டுவது பசிக்க வழிகாட்டுவது அப்பசியை மாற்றிக்கொள்வார் வழிகட்டுதளுக்குப் பின்.



தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.



வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.



பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.


'Mid devotees they're great who hunger's pangs sustain,
Who hunger's pangs relieve a higher merit gain.


The power of those who perform penance is the power of enduring hunger. It is inferior to the power of those who remove the hunger (of others).



aatruvaar aatral pasiAtral appasiyai
maatruvaar aatralin pin

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.



இல்லாதவர்களின் அழிபசி தீர்த்துவிடுதல் ஒருவர் தான் பெற்ற பொருளை வைப்பதற்கான இடமாகும்.



வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.



ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.



பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.


Let man relieve the wasting hunger men endure;
For treasure gained thus finds he treasure-house secure.


The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth.



atraar azhipasi theerththal aqdhoruvan
petraan poruLvaip puzhi

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.



பார்த்து உன்ன மறுப்பவனை ( பகிர்ந்து உன்ன நினைப்பவனை) பசி என்ற தீய நோய் தீண்டுவது கடினம்.



தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.



பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.



பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.


Whose soul delights with hungry men to share his meal,
The hand of hunger's sickness sore shall never feel.


The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others.



paaththooN maree-i yavanaip pasiyennum
theeppiNi theeNdal aridhu

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.



கொடுத்து உதவும் இன்பத்தை அறியமுடியுமோ தனது உடமை என்று வைத்துருந்து இழந்துவிடும் வன்மையானவர்கள்.



தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.



இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?.



ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?.


Delight of glad'ning human hearts with gifts do they not know.
Men of unpitying eye, who hoard their wealth and lose it so?.


Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?.



eeththuvakkum inpam aRiyaarkol thaamudaimai
vaiththizhakkum vankha Navar

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.



கேட்பதை விட கொடுமையானது தேவைக்கு அதிகமாக தன்னால் பெறப்பட்டதை தானே உண்ணுவது.



பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.



பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.



பிறர்க்கு ஈ.வதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.


They keep their garners full, for self alone the board they spread;-
'Tis greater pain, be sure, than begging daily bread!.


Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.



iraththalin innaadhu mandra nirappiya
thaamae thamiyar uNal

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.



மரணத்தை விட கொடியது இல்லை அதுவும் இன்பமாகும் கொடுக்க முடியாத நிலை அடைந்தால்.



சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.



சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.



சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.


'Tis bitter pain to die, 'Tis worse to live.
For him who nothing finds to give!.


Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised.



saadhalin innaadha thillai inidhadhooum
eedhal iyaiyaak kadai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

இல்லை என்ற துன்பமான சொல்லை சொல்ல மன வறுத்தம் வேண்டும். நல்ல ஆறு என்றாலும் முழ்கினால் மரணிப்போம் சொர்க்கம் இல்லை என்றாலும் உதவி செய்து வாழ்வதே மனிதனுக்கு அழகு. நல்ல மனிதர்கள் அடுத்தவர் பசி தீர்பதற்கே தான் சாம்பதித்ததை சேர்த்து வைக்கிறார்கள். ஆற்ற வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது அடுத்தவர் பசி ஆற்றல். பகிர்ந்து உண்பவற்கு பசிக் கொடிமை வராது. கொடுக்க முடிய சுழலைவிட மரணம் இனிமையானது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.