திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: ஈகை / Giving

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.



கொடுத்து உதவும் இன்பத்தை அறியமுடியுமோ தனது உடமை என்று வைத்துருந்து இழந்துவிடும் வன்மையானவர்கள்.



தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.



இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?.



ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?.


Delight of glad'ning human hearts with gifts do they not know.
Men of unpitying eye, who hoard their wealth and lose it so?.


Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?.



eeththuvakkum inpam aRiyaarkol thaamudaimai
vaiththizhakkum vankha Navar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

இல்லை என்ற துன்பமான சொல்லை சொல்ல மன வறுத்தம் வேண்டும். நல்ல ஆறு என்றாலும் முழ்கினால் மரணிப்போம் சொர்க்கம் இல்லை என்றாலும் உதவி செய்து வாழ்வதே மனிதனுக்கு அழகு. நல்ல மனிதர்கள் அடுத்தவர் பசி தீர்பதற்கே தான் சாம்பதித்ததை சேர்த்து வைக்கிறார்கள். ஆற்ற வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது அடுத்தவர் பசி ஆற்றல். பகிர்ந்து உண்பவற்கு பசிக் கொடிமை வராது. கொடுக்க முடிய சுழலைவிட மரணம் இனிமையானது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.