திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: ஈகை / Giving

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.



வழிகாட்டுபவர் வழிகாட்டுவது பசிக்க வழிகாட்டுவது அப்பசியை மாற்றிக்கொள்வார் வழிகட்டுதளுக்குப் பின்.



தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.



வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.



பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.


'Mid devotees they're great who hunger's pangs sustain,
Who hunger's pangs relieve a higher merit gain.


The power of those who perform penance is the power of enduring hunger. It is inferior to the power of those who remove the hunger (of others).



aatruvaar aatral pasiAtral appasiyai
maatruvaar aatralin pin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

இல்லை என்ற துன்பமான சொல்லை சொல்ல மன வறுத்தம் வேண்டும். நல்ல ஆறு என்றாலும் முழ்கினால் மரணிப்போம் சொர்க்கம் இல்லை என்றாலும் உதவி செய்து வாழ்வதே மனிதனுக்கு அழகு. நல்ல மனிதர்கள் அடுத்தவர் பசி தீர்பதற்கே தான் சாம்பதித்ததை சேர்த்து வைக்கிறார்கள். ஆற்ற வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது அடுத்தவர் பசி ஆற்றல். பகிர்ந்து உண்பவற்கு பசிக் கொடிமை வராது. கொடுக்க முடிய சுழலைவிட மரணம் இனிமையானது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.