திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: பகைமாட்சி / The Might of Hatred

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.



வலிமையானவர்கள் மேல் நெஞ்சை நிமிர்த்த விரும்பு. விரும்பாதே மென்மையானவர்கள் மேல் வரும் பகையை.



தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.



பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.



மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்.


With stronger than thyself, turn from the strife away;
With weaker shun not, rather court the fray.


Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.



valiyaarkku maaRetral Ompuka Ompaa
meliyaarmael maega pakai

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.



அன்பில்லாதவன், நெருங்கிய துணையில்லாதவன், சுயமாக சாதிக்க முடியாதவன் என ஏதும் இல்லாதவன் பகை என்ன இலக்கு அடைய முடியும்?.



ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.



மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை எப்படி அழிக்க முடியும்?.



உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?.


No kinsman's love, no strength of friends has he;
How can he bear his foeman's enmity?.


How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?



anpilan aandra thuNaiyilan thaan-dhuvvaan
enpariyum Edhilaan thuppu

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.



அச்சம் என்பதை அறியாமல், அடக்கமுடன் இல்லாமல், கொடுக்கும் பண்பும் அற்று இருப்பவன் பகைக்கு எளிமையாக தஞ்சமடைவான்.



ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.



பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.



அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.


A craven thing! knows nought, accords with none, gives nought away;
To wrath of any foe he falls an easy prey.


In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.



anjum aRiyaan amaivilan eekalaan
thanjam eLiyan pakaikku

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.



நீங்காத வெறுப்பும், நிறைவற்ற மனமும் உள்ளவனை, எக்காலத்திலும் எவ்விடத்திலும் யார் வேண்டுமானலும் வெற்றிகொள்வது எளிது.



ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.



கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.



சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்.


His wrath still blazes, every secret told; each day
This man's in every place to every foe an easy prey.


He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.



neengaan vekuLi niRaiyilan eGnGnaandrum
yaanganum yaarkkum eLidhu

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.



தனக்கான பாதை அறியாமல், தனக்கு உண்டாகும் வாய்ப்பை பயன்படுத்தாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பில்லாமல் இருப்பவனை தனக்கே எல்லாம் என்றிருப்பவன் வெற்றிகொள்வது எளிது.



ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.



நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.



நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.


No way of right he scans, no precepts bind, no crimes affright,
No grace of good he owns; such man's his foes' delight.


(A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities.



vazhinhoakkaan vaaippana seyyaan pazhinhoakkaan
paNpilan patraarkku inidhu

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.



கண்டு அறியாமல் வெறுப்படைபவன், அழிவன மேல் அளவற்ற ஆசைகொள்பவன் எதிர்ப்பு ஏற்றுக்கொள்ளப்படும்.



ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.



நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.



சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.


Blind in his rage, his lustful passions rage and swell;
If such a man mislikes you, like it well.


Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.



kaaNaach chinaththaan kazhiperunG kaamaththaan
paeNaamai paeNap padum

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.



எதையாவது கொடுத்து பெற வேண்டும் கூடி இருந்தே கூடாதன செய்வான் பகையை.



தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.



ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும்.



தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்.


Unseemly are his deeds, yet proffering aid, the man draws nigh:
His hate- 'tis cheap at any price- be sure to buy!.


It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment).



kotuththum koLalvaeNdum mandra atuththirundhu
maaNaadha seyvaan pakai

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.



குணம் இல்லாதவனாய்க் குற்றம் பல செய்பவன் பகைவர்க்கு கடினமில்லா வெற்றியை தருவான்.



ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.



நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.



குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்.


No gracious gifts he owns, faults many cloud his fame;
His foes rejoice, for none with kindred claim.


He will become friendless who is without (any good) qualities. and whose faults are many; (such a character) is a help to (his) foes.



kuNanilanaaik kutram palavaayin maatraarkku
inanilanaam Emaap pudaiththu

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.



பகையுணர்வு உள்ளவருக்கு பிரிக்கமுடியாத இன்பம் அறிவில்லாத அஞ்சும் பகைவர் பெற்றுவிட்டால்.



அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.



நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா.



அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்.


The joy of victory is never far removed from those
Who've luck to meet with ignorant and timid foes.


There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid.



seRuvaarkkuch chaeNikavaa inpam aRivilaa
anjum pakaivarp peRin

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.



கற்று அறியாதவன் வெறுக்கும் சிறுபொருள் எக்காலத்திலும் உடன்பாடதவனை கூட்டத்துடன் உடன்படுத்தாது.



(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.



பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.



பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.


The task of angry war with men unlearned in virtue's lore
Who will not meet, glory shall meet him never more.


The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe).



kallaan vekuLum siRuporuL eGnGnaandrum
ollaanai ollaa thoLi


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வலிமையை எதிர்த்து மென்மையை தவிர்ப்பது பகைக்கு சிறப்பு. அன்பும், நல்ல துணையும், சுய சிந்தனையும் இல்லாதவன் பகை வீண். அச்சமும், அமைதியும், கொடுக்கும் பண்பும் இல்லாதவன் பகைவர்க்கு எளிமையானவன். அறியாமலேயே வெறுப்பும், பேராசையும் உள்ளவனை பகையாக கொள்ள வேண்டும். கூடி இருந்தே அழிக்க நினைப்பவனை பகைமை பாராட்ட வேண்டும். பகை உணர்வு உள்ளவனுக்கு இன்பம் அறிவற்று அஞ்சும் ஒருவரே. கல்லாதவன் யாருடனும் கூடி இருக்கும் தகுதியற்றவன்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.