திருவள்ளுவரின் திருக்குறள்

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.



சிறுமை நமக்கு ஒழிய வேண்டும் என்று தூரம் சென்றவரை எண்ணி நறுமலரைக் கண்டு நாணின கண்.



இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.



பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன.



பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.


Thine eyes grown dim are now ashamed the fragrant flow'rs to see,
Thinking on him, who wand'ring far, leaves us in misery.


While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers.



sirumai namakkozhiyach chaetchendraar ulli
narumalar naanina kan

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.



விரும்பியவர் நெருக்காததை சொல்லுவது போல் உள்ளது பசந்து பனிவாரும் கண்.



பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.



பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!.



பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன.


The eye, with sorrow wan, all wet with dew of tears,
As witness of the lover's lack of love appears.


The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.



nayandhavar nalkaamai solluva poalum
pasandhu panivaarum kan

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.



பிரிந்திருப்பதை அழுத்தமாய் அறிவிப்பது போல் உள்ளது மணம் முடித்த நாட்களில் வீங்கி இருந்த தோள்.



கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.



அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.



தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.


These withered arms, desertion's pangs abundantly display,
That swelled with joy on that glad nuptial day.


The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public).



thanandhamai saala arivippa poalum
manandha-naal veengiya thoal

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.



பருமன் குறைந்து வளையல் போல் மெலிந்துவிடும் துணை நீங்கிப் பழைய நினைப்பில் வாடிய தோள்.



துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.



அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன.



பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.


When lover went, then faded all their wonted charms,
And armlets' golden round slips off from these poor wasted arms.


In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.



panai-neengip paindhoti soarum thunaineengith
tholkavin vaadiya thoal

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.



என்னை பிரிந்த கொடியவரின் கொடுமையை எடுத்துரைக்கும் வளையலுடன் பழைய நினைப்பில் வாடிய தோள்.



வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.



வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன.



வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன.


These wasted arms, the bracelet with their wonted beauty gone,
The cruelty declare of that most cruel one.


The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one.



kotiyaar kodumai uraikkum thotiyodu
tholkavin vaadiya thoal

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.



வளையலுடன் தொள்களும் வேதனையில் நெகிழ்வதால் அவரை கொடியவர் எனக் கூறுகிறேன் நொந்து.



வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.



வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.



என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.


grieve, 'tis pain to me to hear him cruel chid,
Because the armlet from my wasted arm has slid.


I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.



thotiyodu thoalnekizha noval avaraik
kotiyar enakkooral nondhu

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.



பெருமைக் கொள்ள மாட்டாய என் நெஞ்சே கொடியவரின் கொடிமையால் வாடும் தோள் கண்டு எழுந்த பூசலை உரைத்து.



நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?.



நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?.



நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?.


My heart! say ought of glory wilt thou gain,
If to that cruel one thou of thy wasted arms complain?.


Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?.



paadu perudhiyo nenje kotiyaarkken
vaatudhot poosal uraiththu

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.



உறவுக் கொண்ட கைகளால் தடவ பசந்தது பழைய வளையல்கள் அணிந்த இளம்பெண் நெற்றி.



தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.



முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!.



இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது.


One day the fervent pressure of embracing arms I checked,
Grew wan the forehead of the maid with golden armlet decked.


When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow.



muyangiya kaikalai ookkap pasandhadhu
paindhotip paedhai nudhal

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.



உறவுக்கு இடைப்பட்ட குளிர்காற்றால் பசப்புற்ற இளம்பெண் பெருமழையைக் கண்டது கண்.



தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.



(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?.



இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.


As we embraced a breath of wind found entrance there;
The maid's large liquid eyes were dimmed with care.


When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.



muyakkidaith thanvali poazhap pasapputra
paedhai perumazhaik kan

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.



கண்ணில் பசப்பு கலக்கமடைந்தது அன்று இணங்கி இருந்ததைக் கண்டு.



காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.



குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே!.



பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது.


The dimness of her eye felt sorrow now,
Beholding what was done by that bright brow.


Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?.



kannin pasappoa paruvaral eydhindrae
onnudhal seydhadhu kandu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வறுமை போக்க வெளியூர் சென்றவரை எண்ணியபடி நறுமலரை கண்டு நாணுகிறது கண். நாடுபவர் நாடிவாராததை கண்டு கண்களில் பனி வருகிறது. மணமான நாட்களில் பருந்திருந்த தோள் அவர் பிரிவை உணர்த்தும்படி இளைத்திருக்கிறது. பிரிந்த கொடியவரின் கொடுமை உரைக்கிறது என் வளையல்கள். வளையலும் அதை அணிந்த தோள்களும் அவர் கொடியவர் என உரைக்க செய்தது. வாடிய தோள் கண்டு எழும் புசலால் நெஞ்சே பெருமைகொள். கூடி மகிழ்ந்த கைகள் தடவிய நெற்றியில் பசலை படர்ந்தது. காற்றும் புகாதபடி அணைத்து மகிழ்ந்த பெண்ணின் கண் இன்று பெரும் மழை உண்டாக்கியது. கண்ணில் பசப்பு கலைந்தது முன்பு கூடி மகிழ்ந்ததை நினைத்து.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.