திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கூடாவொழுக்கம் / Imposture

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.



ஏமாற்றும் மனம் கொண்டவன் நடித்து நடக்கும் பழக்கத்தை கண்டு நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் என்ற ஐந்து பூதங்களும் வெட்கப்படும்.



வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.



வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.



ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.


Who with deceitful mind in false way walks of covert sin,
The five-fold elements his frame compose, decide within.


The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man.



vanja manaththaan patitrozhukkam poodhangaL
aindhum akaththae nakum

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.



பெரிய உருவம் பெற்று என்ன பயன் தனது நெஞ்சம் தன்னை குற்றம் கொண்டவனாக அறிந்தால்.



தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?.



தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?.



தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.


What gain, though virtue's semblance high as heaven his fame exalt,
If heart dies down through sense of self-detected fault?.


What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin.



vaanuyar thoatram evanseyyum thannenjam
thaanaRi kutrap patin

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.



வலியை தாங்க முடியாதவன் வன்மையான உருவம் பெற்றிருப்பது புலியின் தொலை போர்த்திக் கொண்டு புல்லை மேய்வது போன்றது.



மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.



கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.



மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.


As if a steer should graze wrapped round with tiger's skin,
Is show of virtuous might when weakness lurks within.


The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skin.



valiyil nilaimaiyaan valluruvam petram
puliyinthoal poarththumaeynh thatru

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.



தவம் செய்பவர் போல் தன் உண்மை நிலையை மறைத்து தீமைகளை செய்வது புதரில் மறைந்து வேடன் பறவையை பிடிப்பது போன்றது.



தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.



மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.



புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈ.டுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.


'Tis as a fowler, silly birds to snare, in thicket lurks.
When, clad in stern ascetic garb, one secret evil works.


He who hides himself under the mask of an ascetic and commits sins, like a sportsman who conceals himself in the thicket to catch birds.



thavamaRaindhu allavai seydhal pudhalmaRaindhu
vaettuvan puLsimizhth thatru

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.



பற்று இல்லாமல் போனது என்பவர்களின் படித்து நடக்கும் ஒழுக்கம் ஏன் இப்படி செய்தோம் என்கிற அளவிற்கு துன்பம் பலவும் தரும்.



பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.



எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.



எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்.


'Our souls are free,' who say, yet practise evil secretly,
'What folly have we wrought!' by many shames o'er-whelmed, shall cry.


The false conduct of those who say they have renounced all desire will one day bring them sorrows that will make them cry out, "Oh! what have we done, what have we done".



patratraem enpaar patitrozhukkam etretrendru
Edham palavunh tharum

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.



நெஞ்சத்தில் தேவைகளை அகற்றாமல் தேவை அற்றவர்போல் சூழ்ச்சி செய்து வாழ்பவரை விட வன்மையானவர்கள் இல்லை.



மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.



மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.



உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை.


In mind renouncing nought, in speech renouncing every tie,
Who guileful live,- no men are found than these of 'harder eye'.


Amongst living men there are none so hard-hearted as those who without to saking (desire) in their heart, falsely take the appearance of those who have forsaken (it).



nenjin thuRavaar thuRandhaarpoal vanjiththu
vaazhvaarin van-kaNaar il

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.



வெளியே குற்றம் அறியாதபடி இருப்பவரானாலும் மனதில் உள்ள குற்றம் மூக்கில் எமனை பெற்றுவிடும்.



புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.



குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர்.



வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு.


Outward, they shine as 'kunri' berry's scarlet bright;
Inward, like tip of 'kunri' bead, as black as night.


(The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry.



puRangundri kaNdanaiya raenum agangundri
mukkiR kariyaar udaiththu

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.



மனத்தால் அழுக்கை நீக்காமல் இறந்தார்கள் குளிப்பதும் வேதங்கள் ஓதுவதும் செய்த பல மாந்தர்கள்.



மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.



மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.



நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்.


Many wash in hollowed waters, living lives of hidden shame;
Foul in heart, yet high upraised of men in virtuous fame.


There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of greatness, while their mind is defiled (with guilt).



manaththadhu maasaaka maaNdaar neeraadi
maRaindhozhuku maandhar palar

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.



நேரான அம்பு கொடுமை செய்ய வல்லது யாழ் என்னும் இசைக்கருவியோ நேரானது இல்லை என்றாலும் செம்மையான இசை தரவல்லது அதுபோல செயலின் பயன் கருதி ஏற்கவேண்டும்.



நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.



வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.



நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும். அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்.


Cruel is the arrow straight, the crooked lute is sweet,
Judge by their deeds the many forms of men you meet.


As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated.



kaNaikotidhu yaazhkoadu sevvidhuaanG kanna
vinaipatu paalaal koLal

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.



மொட்டை அடித்துக்கொள்வதும் தாடி வைத்துக்கொள்வதும் தேவை இல்லை உலகம் பழிக்கின்ற செயல்களை விட்டொழித்தால்.



உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.



உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.



உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.


What's the worth of shaven head or tresses long,
If you shun what all the world condemns as wrong?.


There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned.



mazhiththalum neettalum vaeNdaa ulagam
pazhiththadhu ozhiththu vitin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வஞ்சகத்தாரைக் கண்டு பூதங்கள் ஐந்தும் எள்ளி நகையாடும். வான் அளவு வளர்ந்தாலும் தன் நெஞ்சம் குற்ற உணர்வுடன் இருந்தால் என்ன பயன். ஆசை தீர்ந்தவர் போல் நடிப்பவரும், தேவைகள் அற்றவர் போல் வேடம் அணிந்தவரும் திருட்டுத் தனமாக வேடனைப் போல் மறைந்த தன் வேட்கையை தீர்த்துக் கொள்வார்கள். முரன்பட்ட யாழ் போல் ஒருவர் தோன்றம் அளித்தாலும் அதன் இசைப் போல் மனதால் இருக்கக்கூடும். உலகம் பழிக்கதபடி வாழ்பவர் அடுத்தவர் மதிக்க வேண்டும் என்று மொட்டையோ, தாடியோ வைத்துக் கொள்ளத் தேவையில்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.