திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நட்பு / Friendship

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.



நட்பு பாரட்டுவதுப் போல் செய்வதற்கு அரிய செயல் இல்லை. அதுபோலவே, செயல்படுவதற்கும் பாதுகாப்பானது இல்லை.



நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.



சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?.



நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.


What so hard for men to gain as friendship true?
What so sure defence 'gainst all that foe can do?.


What things are there so difficult to acquire as friendship ? What guards are there so difficult to break through by the efforts (of one's foes) ? .



seyaRkariya yaavuLa natpin adhupoal
vinaikkariya yaavuLa kaappu

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.



நிறைவளர்க்கும் குணம் பொருந்தியவர் நட்பு நிறைமதியாய் வளரும், பின்பு தேய்வது போலவே பேதையார் நட்பு தேயும்.



அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.



பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.



அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.


Friendship with men fulfilled of good Waxes like the crescent moon;
Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon.


The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon.



niRainheera neeravar kaeNmai piRaimadhip
pinneera paedhaiyaar natpu

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.



படிக்கும் பொழுதெல்லாம் வளர்க்கும் நூலின் தன்மைப்போல் பழகும் பொழுதெல்லாம் வளர்க்கும் பண்புடையவர்களின் தொடர்பு.



பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.



படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.



படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.


Learned scroll the more you ponder, Sweeter grows the mental food;
So the heart by use grows fonder, Bound in friendship with the good.


Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.



navildhoRum noolnhayam poalum payildhoRum
paNpudai yaaLar thodarpu

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.



மகிழ்வது மட்டுமே அவசியம் இல்லை. நட்டம் அதிகமாகமல் இருக்க தட்டிக் கேட்பதே நட்புக்கு அவசியம்.



நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.



ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.



நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.


Nor for laughter only friendship all the pleasant day,
But for strokes of sharp reproving, when from right you stray.


Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.



nakudhaR poruttandru nattal mikudhikkaN
maeRsenaru itiththaR poruttu

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.



பார்த்து பழகுதல் இல்லை என்றாலும் உணர்ச்சிதான் நட்பை தொடரச் செய்யும்.



நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.



ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.



இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.


Not association constant, not affection's token bind;
'Tis the unison of feeling friends unites of kindred mind.


Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it.



puNarchchi pazhakudhal vaeNdaa uNarchchidhaan
natpaanG kizhamai tharum

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.



முகம் மலர பழகும் நட்பு நட்பு இல்லை. நெஞ்சத்தே உள்முகமாய் மலர பழகுவதே நட்பு.



முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.



பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.



இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.


Not the face's smile of welcome shows the friend sincere,
But the heart's rejoicing gladness when the friend is near.


The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship.



mukanhaka natpadhu natpandru nenjaththu
akanhaka natpadhu natpu

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.



கெடுதலை தவிர்க்கச் செய்து நல்வழிப் படுத்தி கெட்ட காலங்களில் துன்பம் துடைப்பதாம் நட்பு.



அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.



அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.



நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.


Friendship from ruin saves, in way of virtue keeps;
In troublous time, it weeps with him who weeps.


(True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him).



azhivi navainheekki aaRuyththu azhivin-kaN
allal uzhappadhaam natpu

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.



உடை உடலில் இருந்து விலக்க அதை தடுத்து காக்கும் கை போல் நண்பரின் துன்பம் கண்டு களைப்பதே நட்பு.



உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.



பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.



அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்.


As hand of him whose vesture slips away,
Friendship at once the coming grief will stay.


(True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).



udukkai izhandhavan kaipoala aangae
idukkaN kaLaivadhaam natpu

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.



நட்பிற்கு சிறந்த இலக்கணம் எது என்றால் கேட்காமலேயே தேவையறிந்து தாங்கும் தன்மையே.



நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.



நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.



மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.


And where is friendship's royal seat? In stable mind,
Where friend in every time of need support may find.


Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice or virtue and wealth).



natpiRku veetrirukkai yaadhenin kotpindri
ollumvaai oondrum nilai

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.



இவர் என்னைவிட சிறியவர், இவர் இப்படி ஒரு உறவுக்காரர் என்று சொல்லும் பொழுது சிறுமைப்படும் நட்பு.



இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்.



இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும்.



நண்பர்கள் ஒருவருக்கொருவர் இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம் என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.


Mean is the friendship that men blazon forth,
'He's thus to me' and 'such to him my worth'.


Though friends may praise one another saying, "He is so intimate with us, and we so much (with him)"; (still) such friendship will appear mean.



inaiyar ivaremakku innamyaam endru
punaiyinum pullennum natpu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

செயல்களில் அரியது நட்புடன் இருப்பது. நிறைவானவர் நட்பு வளர்மதியாக வளர்ந்து நிறைவற்றவர் நட்பு தேய்ந்துவிடும். படிக்க இனிமையான புத்தகம் போன்றது இனிமையானவர் நட்பு. கூடி மகிழமட்டும் இல்லாமல் குறைகளை எடுத்துக் காட்டி திருத்தவும் நட்பு அவசியம். உதவி கேட்காமலேயே தானாக முன்வந்து செயல்படும் நட்பே நட்பிற்கு இலக்கணம். தன்னை உயர்வாக காட்டும் நட்பு நிலைக்காது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.