திருவள்ளுவரின் திருக்குறள்

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.



குற்றம் ஏதும் இல்லையென்றாலும் சிறு பிணக்கு இன்பம் அளிக்க வல்லதாய் அமைகிறது.



அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.



அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.



எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.


Although there be no fault in him, the sweetness of his love
Hath power in me a fretful jealousy to move.


Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.



illai thavaravarkku aayinum ootudhal
valladhu avaralikku maaru

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.



சிணுங்கலில் தோன்றும் சின்ன அச்சம் நன்மைக்கு எதிராக அமைந்தாலும் பின்பு நல்ல பயனைத் தரும்.



ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.



ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.



காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்.


My 'anger feigned' gives but a little pain;
And when affection droops, it makes it bloom again.


His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.



oodalin thoandrum sirudhuni nallali
vaatinum paadu perum

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.



இணைந்து மகிழ்வதில் புதிய நாடு உண்டோ? நிலத்துடன் நீர் கலந்ததைப் போன்றவர்களின் அகத்தை அறிந்தால்.



நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ?.



நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ?.



நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?.


Is there a bliss in any world more utterly divine,
Than 'coyness' gives, when hearts as earth and water join?.


Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?.



pulaththalin puththelnaadu undoa nilaththodu
neeriyainh thannaar akaththu

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.



இணைவதால் இணைவதையே விருப்புச் செய்கிறது உள்ளம், இணைவதே என் உள்ளத்தை உடைக்கும் படையாக இருக்கிறது.



காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.



என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது.



இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது. அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது.


'Within the anger feigned' that close love's tie doth bind,
A weapon lurks, which quite breaks down my mind.


In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.



pulli vidaaap pulaviyul thondrumen
ullam udaikkum padai

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.



குற்றம் ஏதும் செய்யாத பொழுதும் தானாகவே பணிந்து மென்மையான தோள்களைத் தழுவுவார் அது தரும் சுகம் குறித்து.



தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.



ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.



தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது.


Though free from fault, from loved one's tender arms
To be estranged a while hath its own special charms.


Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.



thavarilar aayinum thaamveezhvaar mendroal
akaralin aangon rudaiththu

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.



உண்பதிலும் உண்டது செரித்தல் இனிமையானது காமம் புணர்வதிலும் ஊடல் இனிமையானது.



உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.



உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.



உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.


'Tis sweeter to digest your food than 'tis to eat;
In love, than union's self is anger feigned more sweet.


To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.



unalinum undadhu aral-inidhu kaamam
punardhalin oodal inidhu

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.



ஊடலில் தோற்றுப் போனவரே வெற்றிபெற்றவர் அதை புரியச் செய்வது கூடி மகிழ்வதே ஆகும்.



ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.



ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்.



ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார். இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்.


In lovers' quarrels, 'tis the one that first gives way,
That in re-union's joy is seen to win the day.


Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows).



oodalil thotravar vendraar adhumannum
kootalir kaanap padum

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.



ஊடலினால் பெரும் சிறப்பு நெற்றி வெயர்க்க கூடி மகிழ்வதால் வரும் உப்பு.



நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?.



நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?.



நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?.


And shall we ever more the sweetness know of that embrace
With dewy brow; to which 'feigned anger' lent its piquant grace.


Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?.



ootip perukuvam kolloa nudhalveyarppak
koodalil thoandriya uppu

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.



ஊடுதல் செய்யவேண்டும் ஒளியைப் போன்றவள் அதுவே இரவை நீளச் செய்யும்.



காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.



ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.



ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.


Let her, whose jewels brightly shine, aversion feign!
That I may still plead on, O night, prolong thy reign!.


May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!.



ootuka mannoa oliyizhai yaamirappa
needuka mannoa iraa

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.



சிறு பிணக்கு காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் கூடி மகிழ்ந்து கொண்டாடுவது.



காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.



காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே.



ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.


A 'feigned aversion' coy to pleasure gives a zest;
The pleasure's crowned when breast is clasped to breast.


Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.



oodudhal kaamaththirku inpam adharkinpam
kooti muyangap perin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

தவறே செய்யாத பொழுதும் பிணங்குவது இன்பம்தர வல்லமை உள்ளதாக இருக்கிறது. பிணங்குவது சிறிய துன்பம் தந்தாலும் நல்ல பயனை தரும். புணர்ந்து மகிழ்ந்தவர் புதிய ஒன்றை நாடமுடியாது காரணம் அவர்கள் நிலத்தின் தன்மை அடைந்த நீர் போல் இணைந்த அகத்தை பெறுகிறார்கள். கூடி மகிழ்வதே அதிகபடியான கூடி மகிழ ஊக்குவிக்கும் இதிவே உள்ளத்து நாணத்தினை அழிக்கும். தவறு செய்யாமலேயே ஆறுதலாக தோள் தழுவுதலில் சுகம் இருக்கிறது. செரித்தபின் உண்ணுவது இனிமையானது அது போல் ஊடலுக்கு பின் காமம் இனிமையானது. ஊடலில் தோற்றவரே வேற்றி பெற்றவர் அதை கூடி மகிழ்வதில் அறியலாம். ஊடலின் சிறப்பு கூடி மகிழ்ந்து நெற்றி வியர்வையின் வந்த உப்பால் அறியலாம். ஊடலே இரவின் நீளத்தை அதிகமாக்கும். ஊடுவதே காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் கூடி மகிழ்வது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.