திருவள்ளுவரின் திருக்குறள்

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.



சிணுங்கலில் தோன்றும் சின்ன அச்சம் நன்மைக்கு எதிராக அமைந்தாலும் பின்பு நல்ல பயனைத் தரும்.



ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.



ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.



காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்.


My 'anger feigned' gives but a little pain;
And when affection droops, it makes it bloom again.


His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.



oodalin thoandrum sirudhuni nallali
vaatinum paadu perum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

தவறே செய்யாத பொழுதும் பிணங்குவது இன்பம்தர வல்லமை உள்ளதாக இருக்கிறது. பிணங்குவது சிறிய துன்பம் தந்தாலும் நல்ல பயனை தரும். புணர்ந்து மகிழ்ந்தவர் புதிய ஒன்றை நாடமுடியாது காரணம் அவர்கள் நிலத்தின் தன்மை அடைந்த நீர் போல் இணைந்த அகத்தை பெறுகிறார்கள். கூடி மகிழ்வதே அதிகபடியான கூடி மகிழ ஊக்குவிக்கும் இதிவே உள்ளத்து நாணத்தினை அழிக்கும். தவறு செய்யாமலேயே ஆறுதலாக தோள் தழுவுதலில் சுகம் இருக்கிறது. செரித்தபின் உண்ணுவது இனிமையானது அது போல் ஊடலுக்கு பின் காமம் இனிமையானது. ஊடலில் தோற்றவரே வேற்றி பெற்றவர் அதை கூடி மகிழ்வதில் அறியலாம். ஊடலின் சிறப்பு கூடி மகிழ்ந்து நெற்றி வியர்வையின் வந்த உப்பால் அறியலாம். ஊடலே இரவின் நீளத்தை அதிகமாக்கும். ஊடுவதே காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் கூடி மகிழ்வது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.