திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நடுவு நிலைமை / Impartiality

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.



தகுதி என்ற ஒன்று நல்லது அது பிரித்துப் பார்க்காமல் எல்லாரிடமும் ஒன்றாக பழுக்கும் தன்மை பெற்றதால்.



அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.



பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.



பகைவர், அயலார், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.


If justice, failing not, its quality maintain,
Giving to each his due, -'tis man's one highest gain


That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue



thakudhi enavondru nandrae pakudhiyaal
paaRpattu ozhukap peRin

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.



சிறப்பு பொருந்தியவன் செயல்கள் வீணாகாமல் வளரும் சந்ததிக்கும் தனிச்சிறப்பு உடையதாய் இருக்கும்.



நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.



நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.



நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.


The just man's wealth unwasting shall endure,
And to his race a lasting joy ensure


The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity



seppam udaiyavan aakkanhj sidhaivindri
echchaththiR kaemaappu udaiththu

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.



நன்மை தருவதாக இருப்பினும் நடுநிலை தவறிய செயல்களை உடனே ஒழித்து விட வேண்டும்.



தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.



நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.



நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.


Though only good it seem to give, yet gain
By wrong acquired, not e'en one day retain


Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity



nandrae tharinum naduvikandhaam aakkaththai
andrae yozhiya vidal

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.



தகுதி உடையவர் தகுதி அற்றவர் என்பது அவர் விட்டுச் செல்லும் உடல் மற்றும் படைப்புகளில் காணப்படும்.



நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.



இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.



ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.


Who just or unjust lived shall soon appear:
By each one's offspring shall the truth be clear


The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings



thakkaar thakavilar enpadhu avaravar
echchaththaaR kaaNappa padum

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.



கெடுவதும் பெருகுவதும் இல்லாமல் இருக்காது மனசாட்சிக்கு மாறுபாடு அற்று இருப்பதே உதாரணமாக வாழ்பவருக்கு அழகு.



கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.



தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.



ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.


The gain and loss in life are not mere accident;
Just mind inflexible is sages' ornament


Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both)



kaedum perukkamum illalla nenjaththuk
koadaamai saandrork KaNi

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.



கெடப்போகிறேன் நான் என்பதை அறியட்டும் நெஞ்சம் நடுநிலை தவறியதை செய்தால்.



தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.



தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.



நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.


If, right deserting, heart to evil turn,
Let man impending ruin's sign discern


Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish."



keduvalyaan enpadhu aRikadhan nenjam
natuvoreei alla seyin

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.



கெடுதலாக குறைத்து பேசாது உலகம் நடுநிலையோடு நன்றியணர்வு கொண்டவனின் வறுமையை.



நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.



நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.



நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.


The man who justly lives, tenacious of the right,
In low estate is never low to wise man's sight


The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity



keduvaaga vaiyaadhu ulakam naduvaaga
nandrikkaN thangiyaan thaazhvu

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.



சமமாக செய்து சரியாக தூக்கும் கோல் போல இருந்து யாதொரு பக்கமும் துக்கம் தராமல் இருப்பது உதாரணமாக வாழும் மனிதர்களுக்கு அழகு.



முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.



முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.



ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.


To stand, like balance-rod that level hangs and rightly weighs,
With calm unbiassed equity of soul, is sages' praise


To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise



samanseydhu seerdhookkunG koalpoal amaindhorupaal
koataamai saandrork kaNi

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.



வார்த்தை எல்லை இல்லாத சிறப்பு ஒருபக்கமாக உள் எல்லை இல்லாமல் இருந்தால் வரும்.



உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.



மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.



நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.


Inflexibility in word is righteousness,
If men inflexibility of soul possess


Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind



soRkoattam illadhu seppam orudhalaiyaa
utkoattam inmai peRin

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.



வியாபாரம் செய்பவருக்கு (வாங்குபவர்களுக்கு)வியாபாரம் செய்து(விற்று) பிற யாவற்றையும் தமக்கு உண்டானதை போல் செய்ய வேண்டும்.



பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.



பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.



பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.


As thriving trader is the trader known,
Who guards another's interests as his own


The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own



VaaNikam seyvaarkku vaaNikam paeNip
piRavum thamapoal seyin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அவர் இவர் என்று பாரபட்சம் பார்க்காமல் இருப்பதே தகுதி. அப்படி வாழ்பவரே தக்கார் அதை அவரது ஏச்சமாகிப் போன உடல் காட்டிவிடும். கேடும் பெருக்கமும் நிலைத்தவை இல்லை என்று அறிந்தவரே சான்றோர். தன்னைப் போல் பிறரை எண்ணும் தன்மையே அவருக்கு அணிகலனாக அமையும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.