திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நடுவு நிலைமை / Impartiality

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.



வார்த்தை எல்லை இல்லாத சிறப்பு ஒருபக்கமாக உள் எல்லை இல்லாமல் இருந்தால் வரும்.



உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.



மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.



நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.


Inflexibility in word is righteousness,
If men inflexibility of soul possess


Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind



soRkoattam illadhu seppam orudhalaiyaa
utkoattam inmai peRin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அவர் இவர் என்று பாரபட்சம் பார்க்காமல் இருப்பதே தகுதி. அப்படி வாழ்பவரே தக்கார் அதை அவரது ஏச்சமாகிப் போன உடல் காட்டிவிடும். கேடும் பெருக்கமும் நிலைத்தவை இல்லை என்று அறிந்தவரே சான்றோர். தன்னைப் போல் பிறரை எண்ணும் தன்மையே அவருக்கு அணிகலனாக அமையும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.