திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நடுவு நிலைமை / Impartiality

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.



வியாபாரம் செய்பவருக்கு (வாங்குபவர்களுக்கு)வியாபாரம் செய்து(விற்று) பிற யாவற்றையும் தமக்கு உண்டானதை போல் செய்ய வேண்டும்.



பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.



பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.



பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.


As thriving trader is the trader known,
Who guards another's interests as his own


The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own



VaaNikam seyvaarkku vaaNikam paeNip
piRavum thamapoal seyin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அவர் இவர் என்று பாரபட்சம் பார்க்காமல் இருப்பதே தகுதி. அப்படி வாழ்பவரே தக்கார் அதை அவரது ஏச்சமாகிப் போன உடல் காட்டிவிடும். கேடும் பெருக்கமும் நிலைத்தவை இல்லை என்று அறிந்தவரே சான்றோர். தன்னைப் போல் பிறரை எண்ணும் தன்மையே அவருக்கு அணிகலனாக அமையும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.