திருவள்ளுவரின் திருக்குறள்

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.



சுயமுன்னேற்றதிர்க்கான வரைமுரையால் சுயத்தை அறியலாம் சுயமுன்னேற்றதிற்கான வரைமுறை உயிரை விட சிறந்ததாக காக்க வேண்டும்.



ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.



ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.



ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.


'Decorum' gives especial excellence; with greater care
'Decorum' should men guard than life, which all men share


Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life



ozhukkam vizhuppanh tharalaan ozhukkam
uyirinum Ompap padum

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.



விரும்பி ஏற்றுக் கொள்ளவேண்டும் சுயமுன்னேற்றதிர்க்கான வரைமுறையை புரிந்து கொண்டு நடப்பவருக்கும் அதுவே துணையாக இருக்கிறது.



ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.



எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.



எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.


Searching, duly watching, learning, 'decorum' still we find;
Man's only aid; toiling, guard thou this with watchful mind


Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid



parindhompik kaakka ozhukkam therindhoampith
therinum aqdhae thuNai

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.



ஒழுக்கத்தின் வெளிப்பாடே குடும்பம், இழுக்கம் பிறப்பையே அசிங்கப் படுத்தி விடும்.



ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.



தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.



ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.


'Decorum's' true nobility on earth;
'Indecorum's' issue is ignoble birth


Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth



ozhukkam udaimai kutimai izhukkam
izhindha piRappaai vidum

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.



பார்ப்பவனுக்கு நினைவிழந்து போனானும் ஏற்றுக் கொள்ளலாம், பிறப்பொழுக்கம் அற்றுப் போனால் ஏற்றுக் கொள்ளமுடியது.



கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.



பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.



பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.


Though he forget, the Brahman may regain his Vedic lore;
Failing in 'decorum due,' birthright's gone for evermore


A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed



maRappinum oththuk koLalaakum paarppaan
piRappozhukkang kundrak kedum

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.



அழுக்கு மனம் உள்ளவனின் வளர்ச்சி இல்லா தன்மைப்போல் ஒழுக்கம் இல்லாதவனுக்கு வளர்ச்சி இல்லை.



பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.



பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.



பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.


The envious soul in life no rich increase of blessing gains,
So man of 'due decorum' void no dignity obtains


Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness



azhukkaa RutaiyaankaN aakkampoan Rillai
ozhukka milaan-kaN uyarvu

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.



ஒழுக்கத்தில் தவறாதவர்கள் உயர்ந்தவர்கள், அவர்கள்இழுக்கத்தின் அவல நிலை அறிந்து உள்ளார்கள்.



ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.



ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.



மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.


The strong of soul no jot abate of 'strict decorum's' laws,
Knowing that 'due decorum's' breach foulest disgrace will cause


Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them



ozhukkaththin olkaar uravoar izhukkaththin
Edham padupaak kaRindhu

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.



ஒழுக்கத்தால் உன்னதமான நிலையை அடைவார்கள் இழுக்கத்தால் இதுவரை இல்லாத பழி வரும்.



ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.



ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.



நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.


'Tis source of dignity when 'true decorum' is preserved;
Who break 'decorum's' rules endure e'en censures undeserved


From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace



ozhukkaththin eydhuvar Maenmai izhukkaththin
eydhuvar eydhaap pazhi

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.



நன்றியுனர்வுக்கு விதையாக நல்லொழுக்கம் அமையும், தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தை தரும்.



நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.



நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.



நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.


'Decorum true' observed a seed of good will be;
'Decorum's breach' will sorrow yield eternally


Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow



nandrikku viththaakum nallozhukkam theeyozhukkam
endrum idumpai tharum

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.



ஒழுக்கமானவர்கள் தீமையானவற்றை தவறியும் வாயில் கூட சொல்லுவது இல்லை.



தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.



மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.



தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.


It cannot be that they who 'strict decorum's' law fulfil,
E'en in forgetful mood, should utter words of ill


Those who study propriety of conduct will not speak evil, even forgetfully



ozhukka mutaiyavarkku ollaavae theeya
vazhukkiyum vaayaaR solal

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.



உலக மனிதர்களுடன் ஒத்திசைவு கொள்ள காற்காதவார் பல துறை அறிவு பெற்றும் அறிவில்லாதவரே.



உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.



முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.



உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.


Who know not with the world in harmony to dwell,
May many things have learned, but nothing well


Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant



ulakaththoadu otta ozhukal palakatrum
kallaar aRivilaa thaar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வாழ்தலுக்கான வரைமுறையே ஒழுக்கம் அது வீடுபெறு அடைய உதவும் என்பதால் உயிரைவிட போற்றவேண்டும். ஒழுகத்தின் வெளிப்பாடே குடும்பம். நல்லெழுக்கம் என்பதே நன்றியுணர்வுடன் இருப்பது. அதிலும் உலகத்துடன் ஒத்திசையும் படி நடப்பவர் கற்று அறிந்தவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.