திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: இரவச்சம் / The Dread of Mendicancy

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.



வெறுப்படையாமல் விருப்பமுடன் கொடுக்கும் கண் போன்றவர் இடத்திலும் கேட்காமல் இருப்பது கோடி நன்மையாகும்.



உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.



ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும்.



இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.


Ten million-fold 'tis greater gain, asking no alms to live,
Even from those, like eyes in worth, who nought concealing gladly give.


Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good.



karavaadhu uvandheeyum kaNNannaar kaNNum
iravaamai koati uRum

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.



கேட்டுப்பெற்றே உயிர் வாழவேண்டிய நிலை ஏற்படும் என்றால் சிதைந்து அழியட்டும் உலகை இயற்றியவன்.



உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.



பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.



பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.


If he that shaped the world desires that men should begging go,
Through life's long course, let him a wanderer be and perish so.


If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish.



irandhum uyirvaazhdhal vaeNdin parandhu
keduka ulagiyatri yaan

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.



இல்லாமையையும் துன்பத்தையும் இரவல் பெற்றுத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கொடுமையைவிட கொடுமையானது இல்லை.



வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.



இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.



வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை.


Nothing is harder than the hardness that will say,
'The plague of penury by asking alms we'll drive away'.


There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working).



inmai idumpai irandhudheer vaamennum
vanmaiyin vanpaatta thil

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.



இருக்கும் இடம் முழுவதும் போதுமானது இல்லை தனக்கு இடம் இல்லை என்று இரந்து கேட்காதவரின் முன்மாதிரியான பண்புக்கு.



வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.



ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.



வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது.


Who ne'er consent to beg in utmost need, their worth
Has excellence of greatness that transcends the earth.


Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution.



idamellaam koLLaath thakaiththae idamillaak
kaalum iravollaach chaalpu

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.



வெறும் தண்ணிர் போல் காய்ச்சிய கூழாக இருப்பினும் உழைத்து உண்ணும் பொழுது அதனிலும் மிகுதியானது இல்லை.



தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.



நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.



கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.


Nothing is sweeter than to taste the toil-won cheer,
Though mess of pottage as tasteless as the water clear.


Even thin gruel is ambrosia to him who has obtained it by labour.



theNNeer adupuRkai aayinum thaaLdhandhadhu
uNNalin oonginiya thil

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.



பசுவிற்கு தண்ணிர் வேண்டும் என்று இரந்து கேட்பது நாவிற்கு இரப்பதின் இழுவானது இல்லை.



பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.



பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை.



தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை.


E'en if a draught of water for a cow you ask,
Nought's so distasteful to the tongue as beggar's task.


There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cow.



aaviRku neerendru irappinum naaviRku
iravin iLivandha thil

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.



இரந்து கேட்கிறேன் இரந்து கேட்பவர்கள் எல்லாரையும், இரந்து கேட்க அவமதிப்பவர் இடத்தில் இரந்து கேட்க வேண்டாம் என்று.



இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.



பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்.



கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்.


One thing I beg of beggars all, 'If beg ye may,
Of those who hide their wealth, beg not, I pray'.


I beseech all beggars and say, "If you need to beg, never beg of those who give unwillingly".



irappan irappaarai ellaam irappin
karappaar iravanmin endru

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.



இரந்து கேட்டல் என்ற பாதுகாப்பாற்ற தோணி மறைத்தல் என்ற கடின பாறையால் சிதைந்து விடும்.



இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்.



வறுமைக் கடலைக் கடந்துவிட ஏறிய பிச்சை என்னும் வலு இல்லாத தோணி இருப்பதை மறைத்தல் என்னும் பாறையில் மோதப் பிளந்துபோகும்.



இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்.


The fragile bark of beggary
Wrecked on denial's rock will lie.


The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal.



iravennum Emaappil thoaNi karavennum
paardhaakkap pakku vidum

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.



கொடுக்கும் பண்புள்ள உள்ளம் உருகும் மறைத்தலை செய்யும் உள்ளம் இருப்பதையும் இல்லாமல் செய்து கெடும்.



இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.



பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால் என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும் இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால் உருகும் உள்ளமும் இல்லாது அழிந்துவிடும்.



இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.


The heart will melt away at thought of beggary,
With thought of stern repulse 'twill perish utterly.


To think of (the evil of) begging is enough to melt one's heart; but to think of refusal is enough to break it.



iravuLLa uLLam urukum karavuLLa
uLLadhooum indrik kedum

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.



கொடுக்க மறைப்பவர் அழியாமல் எப்படி காப்பார்? கேட்பவர் இல்லை என்ற சொல் கேட்டு போய்விடும் உயிரை.



இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே, உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ.



இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது?.



இருப்பதை ஒளித்துக்கொண்டு இல்லை என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?.


E'en as he asks, the shamefaced asker dies;
Where shall his spirit hide who help denies? .


Saying "No" to a beggar takes away his life. (but as that very word will kill the refuser) where then would the latter's life hide itself ?.



karappavarkku yaangoLikkum kolloa irappavar
sollaadap poaOm uyir


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

சலிப்பற்ற கண் போல் கொடுக்கும் ஒருவர் இருப்பினும் கேட்காமல் இருப்பதே கோடி நன்மை. கேட்டுப் பெற்றே வாழ வேண்டும் என்றால் கெட்டு ஒழியட்டும் உலகை படைத்தவன். வறுமையை துன்பத்தை அடுத்தவர் உதவியால் அழிக்க வேண்டும் என்பது கொடுமையிலும் கொடுமை. கேட்டுப் பெறமல் உழைத்து உண்ணும் அரிசி குறைந்த கஞ்சி சிறப்பானது. கேட்பவரை அவமதிப்பவர் இடத்தில் கேட்க வேண்டாம். கொடுப்பவர் உள்ளம் மென்மையாகவும் மேன்மையாகவும் இருக்கும். கொடுக்க மறுப்பவர் தன் உயிரை எப்படி காக்கமுடியும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.