திருவள்ளுவரின் திருக்குறள்

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.



கேடுசெய்பவர் அஞ்சுவது இல்லை வாழ்வை நேசிப்பவர் அஞ்சுவார்கள் தீய வினை என்ற அகங்காரத்திற்கு.



தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.



தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.



தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.


With sinful act men cease to feel the dread of ill within,
The excellent will dread the wanton pride of cherished sin.


Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.



theevinaiyaar anjaar vizhumiyaar anjuvar
theevinai ennum serukku

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.



கெடுதல் கெடுதலை உண்டாக்குவதால் கெடுதல் நெருப்பை விட அஞ்சப்படும்.(குறிப்பு;- நெருப்பு மேலும் நெருப்பை உண்டாக்க வல்லது)



தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.



நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.



தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.


Since evils new from evils ever grow,
Evil than fire works out more dreaded woe.


Because evil produces evil, therefore should evil be feared more than fire.



theeyavai theeya payaththalaal theeyavai
theeyinum anjap padum

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.



அறியவேண்டியதில் எல்லாம் முதன்மையானது தீயதை செய்தவர்க்கும் செய்யாது விடுவது.



தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.



தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.



தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.


Even to those that hate make no return of ill;
So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil.


To do no evil to enemies will be called the chief of all virtues.



aRivinuL ellaanh thalaiyenpa theeya
seRuvaarkkum seyyaa vidal

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.



நினைவு அற்ற நிலையிலும் பிறருக்கு கெடுதல் ஏற்படுத்தாதே. ஏற்படுத்தினால் அறம் ஏற்படுத்தும் எற்படுத்தியவனுக்கு கெடுதலை.



பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.



மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.



மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்.


Though good thy soul forget, plot not thy neighbour's fall,
Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall.


Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.



maRandhum piran-kaetu soozhaRka soozhin
aranjoozham soozhndhavan kaedu

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.



இல்லை என்று கெடுதலை செய்யவேண்டாம், செய்தால் இல்லாமல் போகும் மற்றவைகளும் வேறுபட்டு.



யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.



தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.



வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈ.டுபடக்கூடாது; அப்படி ஈ.டுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.


Make not thy poverty a plea for ill;
Thy evil deeds will make thee poorer still.


Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still.



ilan-endru theeyavai seyyaRka seyyin
ilanaakum matrum peyarththu

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.



கெடுதல் பல பிறருக்கு செய்யக்கூடாது நோய் பல தனக்கு வரக்கூடாது என்று நினைப்பவர்.



துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.



துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.



வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.


What ranks as evil spare to do, if thou would'st shun
Affliction sore through ill to thee by others done.


Let him not do evil to others who desires not that sorrows should pursue him



theeppaala thaanpiRarkaN seyyaRka noaippaala
thannai atalvaeNtaa thaan

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.



எந்தவித எதிர்ப்பு பெற்றவரும் உயர்வடைவார். செயலால் வரும் எதிர்ப்போ ஓயாது சென்று விழ்த்தும்.



எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.



எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.



ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.


From every enmity incurred there is to 'scape, a way;
The wrath of evil deeds will dog men's steps, and slay.


However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.



enaippakai yutraarum uyvar vinaippakai
veeyaadhu pinsendru adum

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.



கேடு செய்தவரை கெடுதல் நிழல் போல் விலகாமல் தொடரும்.



தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.



பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.



ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈ.டுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.


Man's shadow dogs his steps where'er he wends;
Destruction thus on sinful deeds attends.


Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.



theeyavai seydhaar ketudhal nizhaldhannai
veeyaadhu atiuRainh thatru

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.



தன் மீது தனக்கே நேசம் உள்ளவனாக இருந்தால் எப்பொழுதும் அழிக்கவேண்டும் கெடுதல் சார்ந்தவைகளை.



ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.



தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.



தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.


Beware, if to thyself thyself is dear,
Lest thou to aught that ranks as ill draw near!.


If a man love himself, let him not commit any sin however small.



thannaiththaan kaadhala naayin enaiththondrum
thunnaRka theevinaip paal

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.



அருளால் கேட்டை அடைய மாட்டன் என்று அறியவேண்டும் இயல்புக்கு மாறாக சென்று கெடுதல் செய்யவில்லை என்றால்.



ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.



தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.



வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.


The man, to devious way of sin that never turned aside,
From ruin rests secure, whatever ills betide.


Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.



arungaetan enpadhu aRika marungoatith
theevinai seyyaan enin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வாழ்வை நேசிப்பவர் பகைவருக்கும் கேடு செய்ய அஞ்சுவார். தீய செயல்கள் தீமையானதையே செய்யும். தீவினைகள் நம்மை நிழல் போல் தொடரும். தன்னைத் தானே நேசிப்பவர் வீடுபெறு பெற நினைப்பவர் தீமை செய்யாது விலக வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.