திருவள்ளுவரின் திருக்குறள்

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.



அருளால் கேட்டை அடைய மாட்டன் என்று அறியவேண்டும் இயல்புக்கு மாறாக சென்று கெடுதல் செய்யவில்லை என்றால்.



ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.



தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.



வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.


The man, to devious way of sin that never turned aside,
From ruin rests secure, whatever ills betide.


Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.



arungaetan enpadhu aRika marungoatith
theevinai seyyaan enin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வாழ்வை நேசிப்பவர் பகைவருக்கும் கேடு செய்ய அஞ்சுவார். தீய செயல்கள் தீமையானதையே செய்யும். தீவினைகள் நம்மை நிழல் போல் தொடரும். தன்னைத் தானே நேசிப்பவர் வீடுபெறு பெற நினைப்பவர் தீமை செய்யாது விலக வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.