திருவள்ளுவரின் திருக்குறள்

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.



தன் மீது தனக்கே நேசம் உள்ளவனாக இருந்தால் எப்பொழுதும் அழிக்கவேண்டும் கெடுதல் சார்ந்தவைகளை.



ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.



தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.



தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.


Beware, if to thyself thyself is dear,
Lest thou to aught that ranks as ill draw near!.


If a man love himself, let him not commit any sin however small.



thannaiththaan kaadhala naayin enaiththondrum
thunnaRka theevinaip paal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வாழ்வை நேசிப்பவர் பகைவருக்கும் கேடு செய்ய அஞ்சுவார். தீய செயல்கள் தீமையானதையே செய்யும். தீவினைகள் நம்மை நிழல் போல் தொடரும். தன்னைத் தானே நேசிப்பவர் வீடுபெறு பெற நினைப்பவர் தீமை செய்யாது விலக வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.