திருவள்ளுவரின் திருக்குறள்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.



மாற்றுப்பொருள் வேண்டாத கண்ணியம் மழைக்கு என்று நெறிப்படுத்திக் கொள்ளுமோ உலகம்.



இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.



பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?.



கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.


Duty demands no recompense; to clouds of heaven,
By men on earth, what answering gift is given?.


Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?.



kaimmaaRu vaeNtaa katappaatu maarimaattu
en-aatrung kolloa ulaku

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.



ஊக்கமுடன் கொடுத்த பொருள்கள் யாவும் தகுதியுடையவருக்கு உபகாரம் செய்திட வேண்டியே.



ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.



முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.



தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.


The worthy say, when wealth rewards their toil-spent hours,
For uses of beneficence alone 'tis ours.


All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.



thaalaatrith thandha poruLellaam thakkaarkku
vaeLaaNmai seydhaR poruttu

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.



புதிய உலகத்திற்கும் இப்போது உள்ளதற்கும் பெற அரிதானது, மற்ற நன்மைகளில் ஒத்திசைவுக் கொள்வதே.



பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.



தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.



பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ஒப்புரவு என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.


To 'due beneficence' no equal good we know,
Amid the happy gods, or in this world below.


It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods.



puththae Lulakaththum eeNdum peRalaridhae
oppuravin nalla piRa

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.



பொதுவான அறம் போற்றுவான் உயிர் வாழ்பவன். மற்றவர்கள் மரித்தவர்கள் கணக்கில் வைக்கப்படும்.



ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.



உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.



ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.


Who knows what's human life's befitting grace,
He lives; the rest 'mongst dead men have their place.


He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead.



oththa thaRavoan uyirvaazhvaan matraiyaan
seththaaruL vaikkap padum

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.



ஊர் குளம் நீரால் நிறைந்து பயன் தருவதைப்போலவே உலகத்திற்கு உயர் ஞானம் பெற்றவர்களின் உயர்வு உள்ளது.



ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.



உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.



பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.


The wealth of men who love the 'fitting way,' the truly wise,
Is as when water fills the lake that village needs supplies.


The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank.



ooruNi neernhiRainh thatrae ulakavaam
paeraRi vaaLan thiru

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.



பயன் தரும் மரம் இருக்கும் ஊரில் பழுத்து பயன் தருவதைப் போன்றே செல்வம் நல்ல அறிவு உள்ளவருக்கு கிடைப்பது.



ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.



பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.



ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.


A tree that fruits in th' hamlet's central mart,
Is wealth that falls to men of liberal heart.


The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town.



payanmaram uLLoorp pazhuththatraal selvam
nayanutai yaan-kaN patin

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.



மருந்தாக இருந்து தவறு இழக்காத மரத்தை போன்றது செல்வம் பெருமை பல உள்ளவரிடம் கிடைப்பது.



ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.



பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.



பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.


Unfailing tree that healing balm distils from every part,
Is ample wealth that falls to him of large and noble heart.


If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease.



marundhaakith thappaa maraththatraal selvam
perundhakai yaan-kan patin

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.



இடர் ஏற்படும் காலத்திலும் உதவ தயங்காதவர் கட்டாயம் பார்க்க வேண்டியவர்.



ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.



செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.



தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.


E'en when resources fall, they weary not of 'kindness due,'-
They to whom Duty's self appears in vision true.


The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth.



itanil paruvaththum oppuraviRku olkaar
katanaRi kaatchi yavar

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.



நற்சிந்தை உள்ளவன் நீண்ட அமைதியடைவது செய்ய வேண்டியதை செய்யமுடியாத சுழல் அமையும் பொழுதே.



ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.



உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.



பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.


The kindly-hearted man is poor in this alone,
When power of doing deeds of goodness he finds none.


The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same.



nayanutaiyaan nalkoorndhaa naadhal seyumnheera
seyyaadhu amaikalaa vaaRu

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.



அடுத்தவர் வாழ வேண்டும் என்ற பண்பினால் வரும் கேடு என்னவென்றால், அது ஒருவர் விற்றுக்கோள் என்று தனக்கு அவசியமானைதையும் கொடுப்பது.



ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.



இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.



பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.


Though by 'beneficence,' the loss of all should come,
'Twere meet man sold himself, and bought it with the sum.


If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self.



oppuravi naalvarum kaetenin aqdhoruvan
vitrukkoaL thakka thudaiththu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

எதிர்பார்ப்பு இல்லாத மழைப் போல் உதவிட முனைதல் வேண்டும். தகுதியானவற்கு உதவுதல் போன்ற சிறந்த செயல் இல்லை. இடர்பட்ட காலத்திலும் உதவும் ஒருவர் காணக்கூடிய தெய்வம். யாவரும் வாழ நினைக்கும் நல்ல மனிதர்கள் மட்டுமே உயிர் வாழும் மனிதர்கள் மற்றவர்கள் இறந்தவர்கள் கணக்கில் வைக்க வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.