திருவள்ளுவரின் திருக்குறள்

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.



நாடி உறவாடாத நட்பால் கேடு உண்டாகாது, நாடி உறவாடினால் தனக்கான தன்மை மாறும் என்பதை அறிந்து நட்பை ஆளவேண்டும்.



நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.



விரும்பி நட்புச் செய்தவர்க்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை.



ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.


To make an untried man your friend is ruin sure;
For friendship formed unbroken must endure.


As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry.



naataadhu nattaliR kaetillai nattapin
veetillai natpaaL pavarkku

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.



ஆராய்ந்து அறிந்து ஏற்படுத்திக் கொள்வதே நட்பு. கடைபிடிக்க தவறினால் துயரம் தரும்.



ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.



ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.



திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.


Alliance with the man you have not proved and proved again,
In length of days will give you mortal pain.


The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.



aaindhaaindhu koLLaadhaan kaeNmai kadaimuRai
thaansaam thuyaram tharum

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.



ஒருவரின் குணம், அவரது வாழும் முறை, அவரிடம் உள்ள குறைகள், குறைக்க முடியா இன்னும் பல அறிந்தே நட்புக் கொள்ளவேண்டும்.



ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.



ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.



குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.


Temper, descent, defects, associations free
From blame: know these, then let the man be friend to thee.


Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one's relations.



kuNamum kutimaiyum kutramum kundraa
inanum aRindhiyaakka natpu

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.



வாழும் முறை அறிந்த இடத்தில் பிறந்து, தனக்கு பழி நேர அஞ்சுபவரை பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.



உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.



நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.



பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.


Who, born of noble race, from guilt would shrink with shame,
Pay any price so you as friend that man may claim.


The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing.



kutippiRandhu than-kaN pazhinhaaNu vaanaik
kotuththum koLalvaeNdum natpu

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.



துக்கம் மிகுந்து கண்ணிர் பெருக அல்லது கடுமையாய் கண்டித்து நன்மையை எடுத்துரைக்க வல்லார் நட்பை ஆராய்ந்து உறவு பாராட்ட வேண்டும்



நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.



நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.



தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்.


Make them your chosen friend whose words repentance move,
With power prescription's path to show, while evil they reprove.


You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach you (the ways of) the world.



azhachcholli alladhu idiththu vazhakkaRiya
vallaarnhatapu aaindhu koLal

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.



கெட்ட காலத்திலும் உறுதியான நன்மை உண்டு. அது உறவோரின் உண்மைத் தன்மையை உள்ளபடி அளக்கும் வாய்ப்பாவதே.



கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும்.



எவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும் அறிவு நம் துன்பத்தில் உண்டு.



தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.


Ruin itself one blessing lends:
'Tis staff that measures out one's friends.


Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relations.



kaettinum undoar uRudhi kiLaiGnarai
neetti aLappadhoar koal

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.



ஒருவருக்கு நற்பயன் என்பது, மடத்தனமானவரின் நட்பை விலக்கி விடுவதே.



ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.



அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.



ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்.


'Tis gain to any man, the sages say,
Friendship of fools to put away.


It is indead a gain for one to renounce the friendship of fools.



oodhiyam enpadhu oruvaRkup paedhaiyaar
kaeNmai oreei vidal

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.



எண்ணிக் கொண்டு இருக்க வேண்டாம் சிறுமைப்பட்ட எண்ணத்தை. தொடர வேண்டாம் துன்பத்தில் தொடர்பினைத் துண்டிக்கும் நட்பை.



ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.



உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா.



ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும்.


Think not the thoughts that dwarf the soul; nor take
For friends the men who friends in time of grief forsake.


Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity.



uLLaRka uLLam siRukuva koLLaRka
allarkaN aatraruppaar natpu

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.



துன்ப காலத்தில் கைவிட்டார் நட்பை மரணகாலத்தில் எண்ணிணாலும் மனவேதனை கூடும்.



கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.



கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும்.



ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்.


Of friends deserting us on ruin's brink,
'Tis torture e'en in life's last hour to think.


The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of death.



kedungaalaik kaivituvaar kaeNmai atungaalai
uLLinum uLLanhj chudum

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.



மாற்றிக்கொள்ள வேண்டும் மாசற்றவர்களை நண்பர்களாக. எதையாவத் கொடுத்து ஒதுக்கபட வேண்டும் ஒத்திசைவு கொள்ளார் நட்பை.



குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.



குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக.



மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும். மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்.


Cling to the friendship of the spotless one's; whate'er you pay.
Renounce alliance with the men of evil way.


Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world).



maruvuka maasatraar kaeNmaion Reeththum
oruvuka oppilaar natpu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

தேடாத உறவால் கேடு இல்லை. உறவு பாராட்டினால் தன்னிலை மாறும் எனவே ஆராய்ந்து பழிக்கு அஞ்சும், அழச்சொல்லும், தவறை திருத்தும் நட்பை பாராட்ட வேண்டும். துன்பமான நேரத்தில் உண்மையான நட்பை அறியலாம். சிறுமையானவர் நட்பை இழப்பதும் ஊதியமே. மாசு இல்லாதவர் நட்பை பெற்று, ஒத்திசைவு இல்லாதார் நட்பை விலக்க வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.