திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: தவம் / Penance

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.



தான் அடைந்த குற்றங்களை விளக்கிக் கொள்வது உயிருக்கு துன்பம் செய்யாது இருப்பது இதுவே ஏற்படுத்திக் கொண்ட தவத்திற்கு அடையாளம்.



தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.



பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்.



எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவம் என்று கூறப்படும்.


To bear due penitential pains, while no offence
He causes others, is the type of 'penitence'.


The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others.



utranhoai noandral uyirkkuRukaN seyyaamai
atrae thavaththiR guru

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.



தவம் செய்வது தவம் செய்ய வல்லவருக்கு மட்டுமே இயலும் மற்றவர் முயற்சிப்பது பயன் தராது.



தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.



முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான்.



உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்.


To 'penitents' sincere avails their 'penitence';
Where that is not, 'tis but a vain pretence.


Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now).



thavamum thavamutaiyaarkku aakum adhanai
aqdhilaar maeRkoL vadhu

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.



துறந்தவர்களுக்கு உதவிட எண்ணி மறந்துவிட்டார்களோ மற்றவர்கள் தவம் செய்வதை.



துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ?.



துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.



துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது.


Have other men forgotten 'penitence' who strive
To earn for penitents the things by which they live?.


It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?.



thuRandhaarkkuth thuppuravu vaeNdi maRandhaarkol
matrai yavarkaL thavam

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.



ஒத்சிசைவு அற்றவர்களை விலக்கலும் மகிழ்வானவர்களை உருவாக்குவதும் தவம் செய்பவர் நினைத்தால் வரும்.



தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.



பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்.



மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்.


Destruction to his foes, to friends increase of joy.
The 'penitent' can cause, if this his thoughts employ.


If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power of) his austerities.



onnaarth theRalum uvandhaarai aakkalum
eNNin thavaththaan varum

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.



தேவையை தேவைக்கு ஏற்றப்படி பெறுவதால் தவம்செய்ய இங்கே முயற்சிக்கப் படுகிறது.



விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.



விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.



உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்.


That what they wish may, as they wish, be won,
By men on earth are works of painful 'penance' done.


Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come).



vaeNdiya vaeNtiyaang keydhalaal seydhavam
eeNdu muyalap padum

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.



தவம் செய்பவர் தனது சுயம் நிறைவடையும் (கருமம்) செயல் செய்வார் மற்றவர்கள் தவத்திற்கு எதிரானதை செய்கிறார்கள் ஆசைக்கு அடிமைப்பட்டு.



தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.



தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்.



அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈ.டுபடுபவர்கள்.


Who works of 'penance' do, their end attain,
Others in passion's net enshared, toil but in vain.


Those discharge their duty who perform austerities; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure).



thavanhjseyvaar thangarumanhj seyvaarmaR Rallaar
avanjeyvaar aasaiyut pattu

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.



காய்ச்சுவதால் பளபளக்கும் தங்கத்தைப் போலவே ஒளி பரவும் துன்பம் வர வர தவப் பார்வை அகலாதவர்க்கு.



புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.



நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.



தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்.


The hotter glows the fining fire, the gold the brighter shines;
The pain of penitence, like fire, the soul of man refines.


Just as gold is purified as heated in the fire, will those shine, who have endured the burning of pain (in frequent austerities).



sudachchudarum ponpoal oLivitum thunpanhj
sudachsudaa noaRkiR pavarkku

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.



தனது உயிரே தனக்கு அறம் செய்ய வல்லதாய் பெற்றவரை மண்ணில் வாழும் மற்ற எல்லா உயிர்களும் வணங்கும்.



தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.



தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.



தனது உயிர் என்கிற பற்றும், தான் என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.


Who gains himself in utter self-control,
Him worships every other living soul.


All other creatures will worship him who has attained the control of his own soul.



thannuyir thaan-aRap petraanai Enaiya
mannuyi rellaanh thozhum

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.



மரணத்தை மாற்றும் தகுதியும் உண்டாகும் தவத்தின் பயனாக ஆற்றல் அடைந்தவருக்கு.



தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்.



தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.



எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.


The E'en over death the victory he may gain,
If power by penance won his soul obtain.


Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death).



kootram kudhiththalum kaikootum noatralin
aatral thalaippat tavarkkul

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.



இல்லாமையுடன் பலர் இருக்க காரணம் தன்னை அறிய முயற்சிப்பவர் (நோற்பவர்) சிலராகவும் தன்னை அறிய முயலாதவர்கள் (நோலர்) பலராகவும் இருப்பதே.



ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.



பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்.



ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்.


The many all things lack! The cause is plain,
The 'penitents' are few. The many shun such pain.


Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world.



ilarpala raakiya kaaraNam noaRpaar
silarpalar noalaa thavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

தனது துன்பத்தை நீக்கி அடுத்தவர் துன்பத்தை ஒழிப்பதே தவம். இதை அனைவரும் சாதிப்பது இயலாது. தவம் செய்பவர்க்கு உதவ பலர் தவம் செய்வதை தவிர்கிறார்கள். தகுதியானவர்களை தக்க வைக்க தவத்தால் இயலும். தன் உயிரை தெளிவாக அறிந்தவரை மற்றய உயிர்கள் போற்றும். காலனும் தன் கடமை செய்ய அஞ்சுவான் சிலராக இருக்கும் தவம் செய்பவரை கண்டு.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.