திருவள்ளுவரின் திருக்குறள்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.



மகிழ்வான வார்த்தையால் ஈரம் பெருகும், பொய்மை இன்றி உண்மையை அறிந்தவர்களின் வாய் சொல்.



ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.



அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.



அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.


Pleasant words are words with all pervading love that burn;
Words from his guileless mouth who can the very truth discern


Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous



insolaal eeram aLai-ip patiRuilavaam
semporuL kaNtaarvaaich chol

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.



உள்முகமாக இருந்து செய்யும் செயல்களில் நல்லது முக மலர்ச்சியுடன் இனிய வார்த்தைகள் சொல்லுவது.



முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.



முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது.



முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.


A pleasant word with beaming smile's preferred,
Even to gifts with liberal heart conferred


Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind



agan-amarndhu eedhalin nandrae mukanamarndhu
insolan aakap peRin

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.



முகத்திற்கு நேராக அமர்ந்து இனிமையாக பார்த்து உள்ளத்திலிருந்து இனிய வார்த்தைகளை தருவதே அறம்.



முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.



பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.



முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.


With brightly beaming smile, and kindly light of loving eye,
And heart sincere, to utter pleasant words is charity


Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue



mukaththaan amarndhu inidhu-noakki akaththaanaam
insoa linadhae aRam

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.



துன்புறுவதும் துவண்டு விடுவதும் இல்லாமல் போகும் யாரும் இன்பமடையும் இனிய சொல் பேசுபவருக்கு.



யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.



எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.



இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு நட்பில் வறுமை எனும் துன்பமில்லை.


The men of pleasant speech that gladness breathe around,
Through indigence shall never sorrow's prey be found


Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech



thunpuRooum thuvvaamai illaakum yaarmaattum
inpuRooum inso lavarkku

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.



பணிவானவனாகவும் இனிமையான சொல்லை பேசுபவனாகவும் மாறுவதே ஒருவருக்கு சிறந்த அணிகலன். மற்றவைகள் இதுபோன்றவை அல்ல.



வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.



தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.



அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.


Humility with pleasant speech to man on earth,
Is choice adornment; all besides is nothing worth


Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments)



paNivutaiyan insolan aadhal oruvaRku
ANiyalla matrup piRa

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.



தீமைகள் அழிந்து நன்மை பெருகும் நல்லது எது என்று தேடி இனிமையான வார்த்தைகள் பேசினால்.



பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.



பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.



தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.


Who seeks out good, words from his lips of sweetness flow;
In him the power of vice declines, and virtues grow


If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase



allavai theya aRamperukum nallavai
naadi iniya solin

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.



நன்மை தரும் நன்றிவுனவும் கொடுக்கும், பயன்கருதி பக்குவமாய் பெசப்புடும் வார்த்தை.



பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.



பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.



நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.


The words of sterling sense, to rule of right that strict adhere,
To virtuous action prompting, blessings yield in every sphere


That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world)



nayan-eendru nandri payakkum payan-eendru
paNpin thalaippiriyaach chol

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.



குழந்தைத் தனமற்ற இனிய வார்த்தை நாளையும் இன்றும் இன்பம் தரும் .



பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.



பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.



சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.


Sweet kindly words, from meanness free, delight of heart,
In world to come and in this world impart


Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next



siRumaiyuvu neengiya insol maRumaiyum
immaiyum inpam tharum

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.



இனிய வார்த்தைகளால் இன்பம் காண்பவன் எதற்க்காக வன்மையான வார்த்தைகளை வழங்குவது.



இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?.



பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?.



இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?.


Who sees the pleasure kindly speech affords,
Why makes he use of harsh, repellant words


Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?



insol inidheenRal kaaNpaan evan-koloa
vansol vazhangu vadhu

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.



இனிமையானது இருக்கும் பொழுது இனிமையின்றி கூறுவது கனி இருக்க காய் பறிப்பது போன்றது.



இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.



மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.



இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.


When pleasant words are easy, bitter words to use,
Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose


To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe



iniya uLavaaka innaadha kooRal
kani-iruppak kaaikavarnh thatru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

செம்பொருள் கண்டவர் வார்த்தைகள் கண்கள் ஈரம் வழிய செய்யும், உள்ளத்தை பொருத்தே கொடுக்கும் அளவு இருக்கும் முக மலர்ச்சி பொருத்தே வார்த்தை பொருள்படும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.