திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: அருளுடைமை / Compassion

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.



அருட்செல்வமே செல்வத்தில் சிறந்த செல்வம் பொருட்செல்வமோ புரிந்துகொள்ள முடியாதவரிடத்திலும் (முட்டாள்கள் இடத்திலும்) இருக்கிறது.



பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.



செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.



கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈ.டாகாது.


Wealth 'mid wealth is wealth 'kindliness';
Wealth of goods the vilest too possess.


The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men.



arutchelvam selvaththuL selvam porutchelvam
pooriyaar kaNNum uLa

நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.



நல்லது செய்வது வேண்டும் என்றால் அருளால் ஆள்வதற்கு நாட வேண்டும் பல துறைகளில் தேர்ச்சிப் பெற்று இருப்பினும் அருளே துணையாகும்.



நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.



நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.



பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்.


The law of 'grace' fulfil, by methods good due trial made,
Though many systems you explore, this is your only aid.


(Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss).



nallaatraaL naati aruLaaLka pallaatraal
thaerinum aqdhae thuNai

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.



அருள் அடைந்த மனம் படைத்தவருக்கு இல்லை இருளோடு இருக்கும் துன்பமான உலகத்தில் புகுவது.



அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.



அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.



அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்.


They in whose breast a 'gracious kindliness' resides,
See not the gruesome world, where darkness drear abides.


They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.



aruLsaerndha nenjinaark killai iruLsaerndha
innaa ulakam pukal

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.



பூமியில் உள்ள உயிர்களை போற்றி வாழ செய்பவருக்கு இல்லை எனலாம் தனது உயிர் துன்புறும் செயல்.



தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.



நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.



எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.


Who for undying souls of men provides with gracious zeal,
In his own soul the dreaded guilt of sin shall never feel.


(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures).



mannuyir Ompi aruLaaLvaarkku illenpa
thannuyir anjum vinai

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.



துன்பம் அருளை வேண்டி வாழ்பவருக்கு இல்லை இதற்க்கு காற்று பலத்தை கொடுப்பதே சான்று.



அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.



அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.



உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.


The The teeming earth's vast realm, round which the wild winds blow,
Is witness, men of 'grace' no woeful want shall know.


This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted.



allal aruLaaLvaarkku illai vaLivazhangum
mallanmaa GnaalanG kari

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.



பொருள் அற்று மறதி நிலை அடைவர் அருள் அற்று தீமைகளை செய்து வருபவர்.



அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.



அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.



அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.


AGain of true wealth oblivious they eschew,
Who 'grace' forsake, and graceless actions do.


(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer).



poruLnheengip pochchaandhaar enpar arulnheengi
allavai seydhozhuku vaar

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.



அருள் அற்றவருக்கு அக உலகம் இல்லை பொருள் அற்றவருக்கு புற உலகம் புறக்கணிப்பதைப் போல்.



பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.



பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.



பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.


As to impoverished men this present world is not;
The 'graceless' in you world have neither part nor lot.


As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness.



aruLillaarkku avvulakam illai poruLillaarkku
ivvulakam illaaki yaangu

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.



பொருள் இல்லாதவருக்கு ஒருநாள் வசந்தகாலம் வாழ்த்தும் அருள் இல்லாதவர் இல்லாமையை மாற்றுவது இயலாது.



பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.



பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம்.



பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.


Who lose the flower of wealth, when seasons change, again may bloom;
Who lose 'benevolence', lose all; nothing can change their doom.


Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change.



poruLatraar pooppar orukaal aruLatraar
atraarmaR Raadhal aridhu

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.



தெளிவு இல்லாதவன் உண்மை பொருள் கண்டு செயல்படுவதைப் போலவே அருள் இல்லாதவன் செய்யும் உதவியும் இருக்கும்.



அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.



மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.



அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்.


When souls unwise true wisdom's mystic vision see,
The 'graceless' man may work true works of charity.


If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.



theruLaadhaan meypporuL kaNtatraal thaerin
aruLaadhaan seyyum aRam

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.



வலிமையானவர் முன் தன்னை நினைக்காதவனே தன்னை விட மெலிந்தவர் முன் சென்று மேலானவனாக நடந்துக் கொள்கிறான்.



(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.



அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க.



தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.


When weaker men you front with threat'ning brow,
Think how you felt in presence of some stronger foe.


When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself.



valiyaarmun thannai ninaikkathaan thannin
meliyaarmael sellu midaththu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அருள் என்ற செல்வமே செல்வம் பொருள் மூடர் இடத்திலும் இருக்கும். பிற உயிர்களை பேணி காக்கும் அருள் வேட்கை கொண்டவற்கு இருள் என்ற ஒன்று இல்லை. அவர்களுக்கு மேல் உலகம் என்ற இன்பமான வாழ்வு மலரும். அருள் அற்றவர் செய்யும் உதவி வீணான முயற்ச்சி. வலிமையானவர் முன் தன் நிலை எண்ணி உணர்ந்தவர் பிறரை ஏளனமாக பார்ப்பதில்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.