திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: அருளுடைமை / Compassion

நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.



நல்லது செய்வது வேண்டும் என்றால் அருளால் ஆள்வதற்கு நாட வேண்டும் பல துறைகளில் தேர்ச்சிப் பெற்று இருப்பினும் அருளே துணையாகும்.



நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.



நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.



பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்.


The law of 'grace' fulfil, by methods good due trial made,
Though many systems you explore, this is your only aid.


(Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss).



nallaatraaL naati aruLaaLka pallaatraal
thaerinum aqdhae thuNai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அருள் என்ற செல்வமே செல்வம் பொருள் மூடர் இடத்திலும் இருக்கும். பிற உயிர்களை பேணி காக்கும் அருள் வேட்கை கொண்டவற்கு இருள் என்ற ஒன்று இல்லை. அவர்களுக்கு மேல் உலகம் என்ற இன்பமான வாழ்வு மலரும். அருள் அற்றவர் செய்யும் உதவி வீணான முயற்ச்சி. வலிமையானவர் முன் தன் நிலை எண்ணி உணர்ந்தவர் பிறரை ஏளனமாக பார்ப்பதில்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.