திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: அருளுடைமை / Compassion

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.



அருட்செல்வமே செல்வத்தில் சிறந்த செல்வம் பொருட்செல்வமோ புரிந்துகொள்ள முடியாதவரிடத்திலும் (முட்டாள்கள் இடத்திலும்) இருக்கிறது.



பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.



செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.



கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈ.டாகாது.


Wealth 'mid wealth is wealth 'kindliness';
Wealth of goods the vilest too possess.


The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men.



arutchelvam selvaththuL selvam porutchelvam
pooriyaar kaNNum uLa


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அருள் என்ற செல்வமே செல்வம் பொருள் மூடர் இடத்திலும் இருக்கும். பிற உயிர்களை பேணி காக்கும் அருள் வேட்கை கொண்டவற்கு இருள் என்ற ஒன்று இல்லை. அவர்களுக்கு மேல் உலகம் என்ற இன்பமான வாழ்வு மலரும். அருள் அற்றவர் செய்யும் உதவி வீணான முயற்ச்சி. வலிமையானவர் முன் தன் நிலை எண்ணி உணர்ந்தவர் பிறரை ஏளனமாக பார்ப்பதில்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.