திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கண்ணோட்டம் / Benignity

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.



பார்த்தறிதல்(பக்குவமடைதல்) என்னும் தனிச் சிறந்த அழகு அறிந்த உண்மையானவர்களால் உலகம் இருக்கிறது.



கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.



முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.



இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.


Since true benignity, that grace exceeding great, resides
In kingly souls, world in happy state abides.


The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour.



kaNNoattam ennum kazhiperung kaarikai
uNmaiyaan uNtiv vulagu

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.



பார்த்தறிதல்(பக்குவமடைதல்) உள்ளதால் உலகம் இருக்கிறது. அப்படி இல்லாதவர்கள் உண்மை நிலைக்கு பாரமானவர்கள்.



கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.



மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.



அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.


The world goes on its wonted way, since grace benign is there;
All other men are burthen for the earth to bear.


The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.



kaNNoattath thuLLadhu ulakiyal aqdhilaar
uNmai nhilakkup poRai

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.



பண் (ராகம்) எதற்கு பாட்டிற்கு இசையவில்லை என்றால், கண் எதற்கு பார்த்தறிதல்(பக்குவமடைதல்) இல்லாத கண் என்றால்.



பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.



பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?.



இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்.


Where not accordant with the song, what use of sounding chords?
What gain of eye that no benignant light affords?.


Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness.



paN-ennaam paataRku iyaipindrael kaN-ennaam
kaNNoattam illaadha kaN

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.



இருப்பதைப போல் முகத்தில் இருந்து என்ன செய்யும் அதன் தன்மையால் பார்த்தறிதல்(பக்குவமடைதல்) இல்லாத கண்.



தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.



வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?.



அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்.


The seeming eye of face gives no expressive light,
When not with duly meted kindness bright.


Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?.



uLapoal mukaththevan seyyum aLavinaal
kaNNoattam illaadha kaN

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.



கண்ணிற்கு அணியும் சாதனம் பார்த்தறிதல்(பக்குவமடைதல்). அது இல்லை என்றால் புண் என்றே உணரப்படும்.



ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.



ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.



கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண்.


Benignity is eyes' adorning grace;
Without it eyes are wounds disfiguring face.


Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.



kaNNiRku aNikalam kaNNoattam aqdhindrael
puNNendru uNarap padum

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.



மண்ணே மரத்தை வளர்க்கும் அழிக்கவும் செய்கிறது, மரத்தின் தன்மைக்கு ஏற்ப மண் செயல்படுவதைப் போன்றே கண்ணும் கண்ணோடு பார்த்தறிதல்(பக்குவமடைதல்) இல்லாதவர்.



கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்.



கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.



ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.


Whose eyes 'neath brow infixed diffuse no ray
Of grace; like tree in earth infixed are they.


He They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others).



maNNoa tiyaindha maraththanaiyar kaNNoa
tiyaindhukaN Noataa thavar

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.



பார்த்தறிதல்(பக்குவமடைதல்) இல்லாதவர் கண் இல்லாதவர். கண் இருந்தும் பார்த்தறிதல்(பக்குவமடைதல்) இல்லை என்றால் கண் இல்லாதவரே.



கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை.



கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.



கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.


Eyeless are they whose eyes with no benignant lustre shine;
Who've eyes can never lack the light of grace benign.


Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.



kaNNoattam illavar kaNNilar kaNNutaiyaar
kaNNoattam inmaiyum il

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.



காரியங்களை சிதைக்காமல் பார்த்தறிய(பக்குவமடைய) வல்லமை உள்ளவர்களுக்கு உரிமையானது இந்த உலகம்.



தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.



தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.



கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.


Who can benignant smile, yet leave no work undone;
By them as very own may all the earth be won.


The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice).



karumam sidhaiyaamal kaNNoada vallaarkku
urimai udaiththiv vulagu

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.



எதிர்த்து செயல்படும் பண்புள்ளவர்களின் கண்களும் பார்த்தறிந்து (பக்குவமடைந்து) பொறுத்து செயல்படும், இப்பண்பே தலை சிறந்தது.



தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.



தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.



அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.


To smile on those that vex, with kindly face,
Enduring long, is most excelling grace.


Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions.



oRuththaatrum paNpinaar kaNNumkaN Noatip
poRuththaatrum paNpae thalai

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.



நன்கு அறிந்தும் நஞ்சு உண்ண முற்படுவர் விரும்பத்தக்க மாற்றத்தை வேண்டுபவர்.



எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.



எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர்.



கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.


They drink with smiling grace, though poison interfused they see,
Who seek the praise of all-esteemed courtesy.


Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them.



peyakkaNdum nanjuN Tamaivar nayaththakka
naakarikam vaendu pavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பார்த்து அறியும் திறத்தால் உண்மை நிலைக்கிறது. அவர்களால் உலகம் வளம் அடைகிறது. அத்திறன் இல்லாதவர்கள் உலகின் பாராமானவர்கள், பாடலுக்கு இசை போன்றது கண்ணுக்கு பார்த்தறிதல், காரியங்கள் சிதையாமல் உள்ளபடி பாரப்பவர் வல்லமையானவர்கள் அவர்கள் நஞ்சையும் நன்மை பொருட்டு அருந்த தயங்கமாட்டர்கள்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.