திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: இகல் / Hostility

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.



இகழ்ச்சி என்பது எல்லா உயிர்க்கும் அதனதன் இயல்பான பகலை ஏற்காமல் மாற்ற முற்படும் நோய்.



எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.



எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.



மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.


Hostility disunion's plague will bring,
That evil quality, to every living thing.


The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.



ikalenpa ellaa uyirkkum pakalennum
paNpinmai paarikkum noai

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.



நடுநிலைமை கருதி விலகிவிடுதல் செய்தாலும், இகழ்வை கருத்தில்கொண்டு துன்பம்செய்யாமல் இருப்பதே முதன்மையானது.



ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.



நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.



வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈ.டுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்.


Though men disunion plan, and do thee much despite
'Tis best no enmity to plan, nor evil deeds requite.


Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred.



pakalkarudhip patraa seyinum ikalkarudhi
innaasey yaamai thalai

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.



உள்ளபடியே ஏற்க முடியாத இகல் என்ற வரையறுக்க முடியாத நோய் நீங்கினால், வருத்தம் இல்லாது வரும் மாற்றத்தால் தொளிவான விளக்கம் கிடைக்கும்.



ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.



மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.



மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.


If enmity, that grievous plague, you shun,
Endless undying praises shall be won.


To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame.



ikalennum evvanhoai neekkin thavalillaath
thaavil viLakkam tharum

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.



இன்பமும் மேலும் இன்பமும் உண்டாகும் துன்பமும் மேலும் துன்பமும் உண்டாக்கும் பகையுணர்வு என்ற இகல் அழிந்தால்.



இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.



துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.



துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்.


Joy of joys abundant grows,
When malice dies that woe of woes.


If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight.



inpaththuL inpam payakkum ikalennum
thunpaththuL thunpanG ketin

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.



பகையுணர்வுக்கு எதிராக வாழும் ஒழுக்தில் வல்லவரை, யார் வெல்லும் தன்மை கொண்டவர் ?.



இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.



தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?.



மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.


If men from enmity can keep their spirits free,
Who over them shall gain the victory?.


Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?.



ikaledhir saaindhozhuka vallaarai yaarae
mikalookkum thanmai yavar

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.



பகையுணர்வே மிக இனிமையானது என்பவன் வாழ்க்கை எளிதில் கெட்டு அழியும்.



இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.



பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.



மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்.


The life of those who cherished enmity hold dear,
To grievous fault and utter death is near.


Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred.



ikalin mikalinidhu enpavan vaazhkkai
thavalum ketalum naNiththu

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.



பெருமைக் கொள்பவர் மெய்ப்பொருளை காணாதவர் .பகைக் கொள்பவர் தீய அறிவுக் கொண்டவர்.



இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.



மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.



பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.


The very truth that greatness gives their eyes can never see,
Who only know to work men woe, fulfilled of enmity.


Those whose judgement brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.



mikalmaeval meypporuL kaaNaar ikalmaeval
innaa aRivi navar

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.



பகையுணர்வுக்கு எதிராக செயல்பட்டால் ஆக்கம் விளையும். பகையுணர்வை மிகைப்படுத்தினால் கேடு உண்டாக்க ஊக்கம் விளையும்.



இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.



மனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்ப‌தாகும்.



மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்.


'Tis gain to turn the soul from enmity;
Ruin reigns where this hath mastery.


Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin.



ikaliRku edhirsaaidhal aakkam adhanai
miklookkin ookkumaam kaedu

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.



பகையுணர்வு அடையமாட்டார் முன்னேற்றம் வரும்பொழுது .பகையுணர்வை அதிகம் அடைவார் கேடு உண்டாவதற்கு.



ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.



ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.



ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான். ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்.


Men think not hostile thought in fortune's favouring hour,
They cherish enmity when in misfortune's power.


At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase.



ikalkaaNaan aakkam varungaal adhanai
mikalkaaNum kaedu tharaRku

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.



பகையுணர்வால் துன்பமெல்லாம் வரும் என்பதால் அதை விலக்கிடும் நன்மை என்ற செருக்கு.



ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.



மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.



மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்.


From enmity do all afflictive evils flow;
But friendliness doth wealth of kindly good bestow.


All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues.



ikalaanaam innaadha ellaam nakalaanaam
nannayam ennum serukku


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

இகழ்ச்சி என்பது இயல்பை மறுப்பது. நடுநிலைமையுடன் விலகிடினும் இகழ்வை கருத்தில் கொண்டு துன்பம் செய்தல்கூடாது. இகல் என்ற பகை பாராட்டும் நோய் அழித்தால் சிறப்பான மாற்றம் வரும் இன்பம் வளர்ந்து துன்பம் அழியும். பகை உணர்வு அற்றவரை யாரும் வெல்ல முடியாது, எதிரிகள் வாழ்வின் ஏற்றத்திற்கு வேண்டும் என்பவர் எளிதில் அழிவார். உண்மை அறியாதவன் பெருமை கொள்வதைப் போன்றே தீய குணம் உள்ளவர் பகையுணர்வு அடைவார். நன்மை அடைபவர் இகல் என்ற பகை உணர்வு இல்லாதவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.