திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கூடாவொழுக்கம் / Imposture

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.



பற்று இல்லாமல் போனது என்பவர்களின் படித்து நடக்கும் ஒழுக்கம் ஏன் இப்படி செய்தோம் என்கிற அளவிற்கு துன்பம் பலவும் தரும்.



பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.



எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.



எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்.


'Our souls are free,' who say, yet practise evil secretly,
'What folly have we wrought!' by many shames o'er-whelmed, shall cry.


The false conduct of those who say they have renounced all desire will one day bring them sorrows that will make them cry out, "Oh! what have we done, what have we done".



patratraem enpaar patitrozhukkam etretrendru
Edham palavunh tharum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வஞ்சகத்தாரைக் கண்டு பூதங்கள் ஐந்தும் எள்ளி நகையாடும். வான் அளவு வளர்ந்தாலும் தன் நெஞ்சம் குற்ற உணர்வுடன் இருந்தால் என்ன பயன். ஆசை தீர்ந்தவர் போல் நடிப்பவரும், தேவைகள் அற்றவர் போல் வேடம் அணிந்தவரும் திருட்டுத் தனமாக வேடனைப் போல் மறைந்த தன் வேட்கையை தீர்த்துக் கொள்வார்கள். முரன்பட்ட யாழ் போல் ஒருவர் தோன்றம் அளித்தாலும் அதன் இசைப் போல் மனதால் இருக்கக்கூடும். உலகம் பழிக்கதபடி வாழ்பவர் அடுத்தவர் மதிக்க வேண்டும் என்று மொட்டையோ, தாடியோ வைத்துக் கொள்ளத் தேவையில்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.