திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கூடாவொழுக்கம் / Imposture

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.



ஏமாற்றும் மனம் கொண்டவன் நடித்து நடக்கும் பழக்கத்தை கண்டு நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் என்ற ஐந்து பூதங்களும் வெட்கப்படும்.



வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.



வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.



ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.


Who with deceitful mind in false way walks of covert sin,
The five-fold elements his frame compose, decide within.


The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man.



vanja manaththaan patitrozhukkam poodhangaL
aindhum akaththae nakum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வஞ்சகத்தாரைக் கண்டு பூதங்கள் ஐந்தும் எள்ளி நகையாடும். வான் அளவு வளர்ந்தாலும் தன் நெஞ்சம் குற்ற உணர்வுடன் இருந்தால் என்ன பயன். ஆசை தீர்ந்தவர் போல் நடிப்பவரும், தேவைகள் அற்றவர் போல் வேடம் அணிந்தவரும் திருட்டுத் தனமாக வேடனைப் போல் மறைந்த தன் வேட்கையை தீர்த்துக் கொள்வார்கள். முரன்பட்ட யாழ் போல் ஒருவர் தோன்றம் அளித்தாலும் அதன் இசைப் போல் மனதால் இருக்கக்கூடும். உலகம் பழிக்கதபடி வாழ்பவர் அடுத்தவர் மதிக்க வேண்டும் என்று மொட்டையோ, தாடியோ வைத்துக் கொள்ளத் தேவையில்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.