திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கூடாவொழுக்கம் / Imposture

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.



நேரான அம்பு கொடுமை செய்ய வல்லது யாழ் என்னும் இசைக்கருவியோ நேரானது இல்லை என்றாலும் செம்மையான இசை தரவல்லது அதுபோல செயலின் பயன் கருதி ஏற்கவேண்டும்.



நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.



வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.



நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும். அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்.


Cruel is the arrow straight, the crooked lute is sweet,
Judge by their deeds the many forms of men you meet.


As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated.



kaNaikotidhu yaazhkoadu sevvidhuaanG kanna
vinaipatu paalaal koLal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வஞ்சகத்தாரைக் கண்டு பூதங்கள் ஐந்தும் எள்ளி நகையாடும். வான் அளவு வளர்ந்தாலும் தன் நெஞ்சம் குற்ற உணர்வுடன் இருந்தால் என்ன பயன். ஆசை தீர்ந்தவர் போல் நடிப்பவரும், தேவைகள் அற்றவர் போல் வேடம் அணிந்தவரும் திருட்டுத் தனமாக வேடனைப் போல் மறைந்த தன் வேட்கையை தீர்த்துக் கொள்வார்கள். முரன்பட்ட யாழ் போல் ஒருவர் தோன்றம் அளித்தாலும் அதன் இசைப் போல் மனதால் இருக்கக்கூடும். உலகம் பழிக்கதபடி வாழ்பவர் அடுத்தவர் மதிக்க வேண்டும் என்று மொட்டையோ, தாடியோ வைத்துக் கொள்ளத் தேவையில்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.