திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: ஈகை / Giving

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.



மரணத்தை விட கொடியது இல்லை அதுவும் இன்பமாகும் கொடுக்க முடியாத நிலை அடைந்தால்.



சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.



சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.



சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.


'Tis bitter pain to die, 'Tis worse to live.
For him who nothing finds to give!.


Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised.



saadhalin innaadha thillai inidhadhooum
eedhal iyaiyaak kadai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

இல்லை என்ற துன்பமான சொல்லை சொல்ல மன வறுத்தம் வேண்டும். நல்ல ஆறு என்றாலும் முழ்கினால் மரணிப்போம் சொர்க்கம் இல்லை என்றாலும் உதவி செய்து வாழ்வதே மனிதனுக்கு அழகு. நல்ல மனிதர்கள் அடுத்தவர் பசி தீர்பதற்கே தான் சாம்பதித்ததை சேர்த்து வைக்கிறார்கள். ஆற்ற வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது அடுத்தவர் பசி ஆற்றல். பகிர்ந்து உண்பவற்கு பசிக் கொடிமை வராது. கொடுக்க முடிய சுழலைவிட மரணம் இனிமையானது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.