திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: மானம் / Honour

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.



மருந்தால் சாதிக்க முடியாது ஊனில் உயிர் நிலைக்கும் வாழ்க்கை. எனவே பெருந்தகமை என்பது பீடை வந்த இடத்திலும் உயிரை மாய்க்காது இருத்தலே.



ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.



குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ?.



சாகாமலே இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்.


When high estate has lost its pride of honour meet,
Is life, that nurses this poor flesh, as nectar sweet?.


For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death.



marundhoamatru oon-Ompum vaazhkkai perundhakaimai
peetazhiya vandha idaththu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அதிகபட்ச தேவை தீர்க்கும் என்றாலும் அதை குறுக்கு வழியில் அடைய நினைப்பதே மானம் என்பாதல் சிறப்பற்ற ஒன்றை செய்யமாட்டர் சிறப்புடன் வாழ நினைப்பவர். தகுதி வளர்ந்தவர் உயர்ந்த நிலையில் பணிவாகவும் தாழ்ச்சி ஏற்படும் பொழுது தன்னை உயர்வாகவும் தற்காத்துக் கொள்வார். உதிர்ந்த மயிர் சிதையாது என உணர்ந்து மனித கூட்டத்திற்கு அற்பாற்பட்டு சிந்தித்து நிலையாக நிறுத்த முடியாத உயிருக்கு மதிப்பளித்து மனித குலத்திற்கே வழிகாட்டியாக வாழ்வதே மானம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.