திருவள்ளுவரின் திருக்குறள்

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.



இன்றே மரணம் என்றே ஆனலும் கூட்டமாய் எதிர்க்கும் ஆற்றல் உடையதுவே படை.



எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.



எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.



உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்.


That is a 'host' that joins its ranks, and mightily withstands,
Though death with sudden wrath should fall upon its bands.


That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury.



kootrutandru maelvarinum koodi edhir-niRkum
aatra ladhuvae padai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உட்பிரிவுகளுடன் அஞ்சாத படை ஆள்பவரின் முதன்மையானது. நாகத்தின் ஒசை கேட்டு ஓடும் எலிக் கூட்டமாய் நடுக்க செய்யும் அஞ்சாத படை பழைமையானது. வாழைத்தார் போல் அடுக்கப்பட்ட படை எண்ணிக்கை குறைந்தாலும் வெற்றி பெறும். மன உறுதி உள்ள வீரர்கள் இருந்தும் வழிநடத்த சரியான ஆள் இல்லை என்றால் வெற்றி இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.