திருவள்ளுவரின் திருக்குறள்

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.



வெற்றிபெரும் தன்மையும், அதற்கான ஆற்றலும் இல்லை என்றாலும், அதன் அமைப்பு முறையால் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.



போர் செய்யும் வீரமும்( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்.



பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.



போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும் விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும்.


Though not in war offensive or defensive skilled;
An army gains applause when well equipped and drilled.


Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearance.



adaldhakaiyum aatralum illeninum thaanai
padaiththakaiyaal paadu peRum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உட்பிரிவுகளுடன் அஞ்சாத படை ஆள்பவரின் முதன்மையானது. நாகத்தின் ஒசை கேட்டு ஓடும் எலிக் கூட்டமாய் நடுக்க செய்யும் அஞ்சாத படை பழைமையானது. வாழைத்தார் போல் அடுக்கப்பட்ட படை எண்ணிக்கை குறைந்தாலும் வெற்றி பெறும். மன உறுதி உள்ள வீரர்கள் இருந்தும் வழிநடத்த சரியான ஆள் இல்லை என்றால் வெற்றி இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.