திருவள்ளுவரின் திருக்குறள்

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.



நன்மை தரும் நன்றிவுனவும் கொடுக்கும், பயன்கருதி பக்குவமாய் பெசப்புடும் வார்த்தை.



பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.



பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.



நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.


The words of sterling sense, to rule of right that strict adhere,
To virtuous action prompting, blessings yield in every sphere


That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world)



nayan-eendru nandri payakkum payan-eendru
paNpin thalaippiriyaach chol


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

செம்பொருள் கண்டவர் வார்த்தைகள் கண்கள் ஈரம் வழிய செய்யும், உள்ளத்தை பொருத்தே கொடுக்கும் அளவு இருக்கும் முக மலர்ச்சி பொருத்தே வார்த்தை பொருள்படும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.