திருவள்ளுவரின் திருக்குறள்

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.



குழந்தைத் தனமற்ற இனிய வார்த்தை நாளையும் இன்றும் இன்பம் தரும் .



பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.



பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.



சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.


Sweet kindly words, from meanness free, delight of heart,
In world to come and in this world impart


Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next



siRumaiyuvu neengiya insol maRumaiyum
immaiyum inpam tharum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

செம்பொருள் கண்டவர் வார்த்தைகள் கண்கள் ஈரம் வழிய செய்யும், உள்ளத்தை பொருத்தே கொடுக்கும் அளவு இருக்கும் முக மலர்ச்சி பொருத்தே வார்த்தை பொருள்படும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.