திருவள்ளுவரின் திருக்குறள்

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.



ஆராய்ந்து அறிந்து ஏற்படுத்திக் கொள்வதே நட்பு. கடைபிடிக்க தவறினால் துயரம் தரும்.



ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.



ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.



திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.


Alliance with the man you have not proved and proved again,
In length of days will give you mortal pain.


The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.



aaindhaaindhu koLLaadhaan kaeNmai kadaimuRai
thaansaam thuyaram tharum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

தேடாத உறவால் கேடு இல்லை. உறவு பாராட்டினால் தன்னிலை மாறும் எனவே ஆராய்ந்து பழிக்கு அஞ்சும், அழச்சொல்லும், தவறை திருத்தும் நட்பை பாராட்ட வேண்டும். துன்பமான நேரத்தில் உண்மையான நட்பை அறியலாம். சிறுமையானவர் நட்பை இழப்பதும் ஊதியமே. மாசு இல்லாதவர் நட்பை பெற்று, ஒத்திசைவு இல்லாதார் நட்பை விலக்க வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.