திருவள்ளுவரின் திருக்குறள்

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.



நாடி உறவாடாத நட்பால் கேடு உண்டாகாது, நாடி உறவாடினால் தனக்கான தன்மை மாறும் என்பதை அறிந்து நட்பை ஆளவேண்டும்.



நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.



விரும்பி நட்புச் செய்தவர்க்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை.



ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.


To make an untried man your friend is ruin sure;
For friendship formed unbroken must endure.


As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry.



naataadhu nattaliR kaetillai nattapin
veetillai natpaaL pavarkku


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

தேடாத உறவால் கேடு இல்லை. உறவு பாராட்டினால் தன்னிலை மாறும் எனவே ஆராய்ந்து பழிக்கு அஞ்சும், அழச்சொல்லும், தவறை திருத்தும் நட்பை பாராட்ட வேண்டும். துன்பமான நேரத்தில் உண்மையான நட்பை அறியலாம். சிறுமையானவர் நட்பை இழப்பதும் ஊதியமே. மாசு இல்லாதவர் நட்பை பெற்று, ஒத்திசைவு இல்லாதார் நட்பை விலக்க வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.