திருவள்ளுவரின் திருக்குறள்

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.



பரவும் புகழுக்காக உயிரையும் துறப்பவர்கள், காலின் அணிகலன்களை விலக்கிய நடனப்பெண் போன்றவர்கள்.



பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.



தம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டு் நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே.



சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்.


Who seek for world-wide fame, regardless of their life,
The glorious clasp adorns, sign of heroic strife.


The fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves).



suzhalum isaivaendi vaendaa uyiraar
kazhalyaappuk kaarikai neerththu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

என் முன் நிற்காதே தோல்வி அடைவாய் என்ற செருக்குடைய படைவீரன் காட்டு முயலுக்கு அம்பு ஏய்துவதிலும் கொல்லமுடிய யானை மீது ஏய்தவே முற்படுவான். மரணமும் மதிப்பு மிகுந்தது என உணர்ந்தவனே எல்லாரலும் மதிக்கப்படுவான்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.