திருவள்ளுவரின் திருக்குறள்

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.



தேவை என்றால் உயிருக்கு அஞ்சாத மறவர் தன் அரசன் தடுத்தாலும் சீர் குறைவது இல்லை.



போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.



போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.



தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.


Fearless they rush where'er 'the tide of battle rolls';
The king's reproof damps not the ardour of their eager souls.


The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting).



uRinuyir anjaa maRavar iRaivan
seRinum seerkundral ilar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

என் முன் நிற்காதே தோல்வி அடைவாய் என்ற செருக்குடைய படைவீரன் காட்டு முயலுக்கு அம்பு ஏய்துவதிலும் கொல்லமுடிய யானை மீது ஏய்தவே முற்படுவான். மரணமும் மதிப்பு மிகுந்தது என உணர்ந்தவனே எல்லாரலும் மதிக்கப்படுவான்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.