திருவள்ளுவரின் திருக்குறள்

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.



குற்றம் செய்வதை விடாமல் காக்கும் பொருளாக்கும் குற்றமே அழிவைத் தரும் பகை



குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.



அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.



குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.


Freedom from faults is wealth; watch heedfully
'Gainst these, for fault is fatal enmity.


Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.



kutramae kaakka poruLaakak kutramae
atran tharooum pakai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நான் என்ற செருக்கும், சினமும், தாழ்வு மனப்பாண்மையும் இல்லாதவரின் வளர்ச்சி ஆணவம் இல்லாமல் இருக்கும். ஆசை, மதிக்காத மனக்கேட்ட செயல், உண்மையற்ற மகிழ்ச்சி உயர்வை தடுக்கும். சிறிய தவறையும் பெரிதாக பார்க்க வேண்டும். தன்னைத் தானே வியத்தல் குற்றமாகும். அறியாமையை அழிக்க காதல் கொண்டால் ஏதும் அற்ற நூலை தேவையற்றது என மாற்றிவிடலாம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.