திருவள்ளுவரின் திருக்குறள்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.



குற்றத்தால் துன்பம் வருமுன் தன்னை காத்துக் கொள்ள தவறியவரின் வாழ்க்கை தீயின் முன்னே வைத்த வைக்கோல் போலக் கெடும்.



குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.



தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.



முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.


His joy who guards not 'gainst the coming evil day,
Like straw before the fire shall swift consume away.


The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.



varumunnark kaavaadhaan vaazhkkai erimunnar
vaiththooRu poalak kedum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நான் என்ற செருக்கும், சினமும், தாழ்வு மனப்பாண்மையும் இல்லாதவரின் வளர்ச்சி ஆணவம் இல்லாமல் இருக்கும். ஆசை, மதிக்காத மனக்கேட்ட செயல், உண்மையற்ற மகிழ்ச்சி உயர்வை தடுக்கும். சிறிய தவறையும் பெரிதாக பார்க்க வேண்டும். தன்னைத் தானே வியத்தல் குற்றமாகும். அறியாமையை அழிக்க காதல் கொண்டால் ஏதும் அற்ற நூலை தேவையற்றது என மாற்றிவிடலாம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.