திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கேள்வி / Hearing

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.



எவ்வகையிலும் நல்லவற்றை கேட்டு அறிதல் வேண்டும் அது எல்லா வகையிலும் சிறந்த உயர்வை தரும்.



எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.



சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.



நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.


Let each man good things learn, for e'en as he
Shall learn, he gains increase of perfect dignity.


Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.



enaiththaanum nallavai kaetka anaiththaanum
aandra perumai tharum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உயர் ஞானம் எனப்படும் நாத அனுபவத்தை செவி தருவதால் அச் செல்வம் செல்வத்திற்கெல்லாம் முதன்மையானது. நாத ஒலி குறைந்தால் வயிற்றுக்கு உணவு தர வேண்டும். செவியின் சுவை உணர்ந்தவரே ஆன்றோர். அவர்கள் பிழைப்புக்காக முட்டாள்தனமான செயல்கள் செய்வதில்லை. நாத அனுபவம் அற்றவர் பணிவாக நடப்பதில்லை. செவியின் சுவையை உணராமல் வாய்ச் சுவைக்கே முன்னுரிமைத் தரும் மனிடப் பதர்கள் வாழ்வதும் சாவதும் ஒன்றே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.